பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறும்புகளையும் பருந்துகளையும் என் - இலைகளாகவும் பறவைகளாகவும் கனவு காண்கிறேன்.

கோடாலிக்காரா !

என் -

நிழலைக் கூட வெட்டி எறிந்துவிடு. பயனற்று நிற்கும் பரிதாப நிலையிலிருந்து எனக்கு விடுதலை கொடு.

பயனற்ற நிலையில் இருக்கும் படைப்பிலக்கியவாதியின் பரிதவிப்பை, லார்கா இப்பாட்டில் உணர்ச்சிகரமாகச் சித் த ரி க் கி றா ன் . பூத்துக் காய்த்துக் கனி குலுங்கும் மரத்தில், பறவைகளும், வெளவால்களும் கும்பலாகக் கூடித்தின்று ஆரவாரிக்கும். அம்மரத்தின் செழுமையான வாழ்வுக்கும், உயிரோட்டத்திற்கும் அவை சான்றுகள். ஆனால், பருந்து பழ மரத்தில் உட்காருவதில்லை ; அது. பட் டு ப் போய்த் தனித்து நிற்கும் ஒற்றை மரத்தின் உச்சியில்தான் உட்காரும். பட்ட மரத்தை எறும்பு அரிக்கும் பயனற்ற மனிதனை வேதனை அரிக்கும். லார்காவின் ஆழமான கற்பனை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

லார்காவின் தகாத பாலுறவுப் பழக்கம் ( Homo Sexual Practise ), ஸ்பெயினிலிருந்து வெளியேறி அமெரிக்கா செல்லும் சூ ழ் நி ைல ைய அவனுக்கு உருவாக்கியது. அவனுடைய பாலுறவுக் கொள்கை, அவன் எழுதிய

149