தென்கோடித் திருடன்யான் ஆலயத்தில்
திருடியுள்ளேன் திருமங்கை ஆழ்வார் போலே அன்றாடம் கன்னியரைக் கற்ப ழித்தே
ஆனந்தம் கண்டேன்யான் கோபாட் போல ! முன்கோபம் கொண்டவன்யான் பாண்டி நாட்டு முடிவேந்த னாம்தந்து மாறன் போல !
தேன்.மழை பக். 80
பேர்வாய்ந்த போர்வேந்தன் சந்த்ர குப்தன்
பிறராலே தீங்குவரும் என்றே அஞ்சி ஒர்நாளைக் கோரிடத்தில் உறங்கு வானாம்
தேன் மழை பக். 196
ஆயிரத்தைந் நூற்றுநாற் பத்தி ரண்டாம் ஆண்டுதனில் அவதரித்த அக்ப ரோடு
அமுதும் தேனும் பக். 21
அன்றாடம் ஆராய்ந்தான் ; நோன்பு நோற்றான் அக்பரைப்போல் குறைவாக உறங்கி வந்தான்
அமுதும் தேனும் பக். 34
மீன்கறியைத் தின்றதனால் துக்ளக் செத்தான் மிதமிஞ்சினா லெதுவும் தீமை செய்யும்
துறைமுகம் பக். 32
சம்பங்கிப் பூவே பெளத்த
சங்கிகள் என்போர், மாட்டுக்
கொம்புக்குள் உப்பு வைத்துக்
கொள்வதுண் டென்று சொன்னான்.
துறைமுகம் பக், 49
6 4