இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
17
யாருக்குச் சொந்தம்?
அருமை நண்பர் புடைசூழ
அழகுப் பூங்கா வழியாக ஒருநாள் பொழுது போக்கிடவே
உவந்து சென்றான் சித்தார்த்தன்.
தாராக் கூட்டம் ஒன்றங்கே
தலைக்கு மேலே சிறைவிரித்துச் சீராய்ப் பறந்து வான்வழியே
செல்லும் காட்சி கண்டானே.
ஐயோ பாவம் ஒருதாரா
யாரோ எய்த அம்பாலே மெய்துடித்துப் புண்பட்டு
மேலிருந்து வீழ்ந்ததுவே.
குருதி வழியக் காலடியில்
குற்றுயி ராகக் கிடந்ததனைக் கருணை வழியும் நெஞ்சோடு
கையில் எடுத்தான் சித்தார்த்தன்.
பாய்ந்த அம்பை வெளிப்படுத்திப்
பாயும் குருதி தடைப்படுத்தி வாய்ந்த கருணை மிகைப்படவே
மருந்து வைத்துக் கட்டினனே.