பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


உமரை நோக்கிச் சுல்தானும் உமக்கிது கடிதோ?’ எனக் கேட்டார் அமைதி நிறைந்த புலவருமே அல்ல, அல்ல’’ என்றுரைத்தார். எமனத்து முடிவை ஒரு தாளில் மறைவாய் எழுதி மடித்துடனே எனக்குக் கொடுப்பீர், ஆட்களையே இவனும் அழைக்கக் காண்போமே? இப்படி சுல்தான் சொன்னவுடன் எழுதிக் கொடுத்தார் உமர்கய்யாம் மெய்ப்படி சூழ்ச்சி பலித்ததென மிகவும் மகிழ்ந்தான் கூத்தாடி. ஓடி வாரீர்??? எனக் கூவி உடனே அழைத்தான் வஞ்சகனும் கூடி யிருந்தோர் நாற்புறமும் கோட்டை வழிகள் தமைப்பார்த்தார். தெற்கு வாசல் பார்த்தனரே திரும்பி வடக்கைப் பார்த்தனரே உற்று மேற்கை நோக்கிப்பின் உடனே கிழக்கில் திரும்பினரே! எந்த வாசல் வழியாயும் எவரும் உள்ளே வரவில்லை விந்தை யாகப் பார்த்திருந்தோர் வியப்பும் திகைப்பும் கொண்டிருந்தார்.