பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


என்றோர் அமைச்சர் அங்குரைத்தார் இளங்கோ மேலும் கொதிப்படைந்தான் என்றும் அவன் சொல் பலிக்காதாம் இன்றே மெய்ப்பிப் பே22னென்றான். எண்ணம் ஒன்று நெடுநாளாய் என்னுள் கருவாய் உருவாகி வண்ணம் பெற்ற திந்நாளே வழுத்து கின்றேன் பெரியோரே செல்வம் அரச போகமெனும் சிறிய இன்பம் தனைத்துறந்தே மெய்யாம் இன்ப வழிகாண விழைந்தேன்?’ என்றான் இளங்கோவே! அன்னை தந்தை தமைவணங்கி அண்ணன் தனையும் உடன்வணங்கி பின்னும் அவையிற் கூடியுள்ள பெரியோர் கூட்டம் தனைவணங்கி வாட்டம் சிறிதும் கொள்ளாமல் காவி பூண்டு குணவாயில் கோட்டம் சென்றார்; துறவறமே குறியாய்க் கொண்டு வாழ்ந்தாரே! செந்தமிழ்த் தாய்க்கோர் அணியாகும் சிலப்பதி காரக் காப்பியமே அந்தமில் இன்பத் தரசாளும் அண்ணல் இளங்கோ அருட்கொடையே!