பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தியடிகள் தடம்புரண்டார்

73

பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்ற காந்தியடிகள் ஆயிரக் கணக்காண ஆண்டுகளாக சாதிக் கொடுமையால் வெந்து நொந்து புழுங்கிச் செத்துக் கொண்டு வருகின்றவர்களுக்கு உணர்ச்சிகளே இல்லை என்று நினைத்து விட்டார் போலும்.

எப்படியாயினும் இந்த அறிக்கையின் மூலம்

“நான் பச்சையாகப் பார்ப்பனர்கள் பக்கம்தான் இருக்கிறேன்” என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் காந்தியடிகள்.

இப்படிப்பட்ட கருத்தை அவர் திருவாய் மலர்ந்து உதிர்த்த பிறகு அவரைப் பற்றி என்ன நினைப்பது?

“மகாத்மா காந்திக்கி ஜே!” என்ற முழக்கம் தமிழ் நாட்டில் தான் ஓங்கி ஒலித்தது.

ஆனால் காந்தியடிகள் தடம் புரண்ட பிறகு இந்த முழக்கத்தின் ஒலி மெல்ல மெல்ல மங்கி முற்றிலுமாக மறைந்தே போயிற்று!

காந்தி தடம்புரண்ட வரலாறுகள் ஒன்றா இரண்டா ?

ஏழைகள் முன்னேற வேண்டும் என்பார். பிர்லா மாளிகையில் தங்கிப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவார்.

கு-5