பக்கம்:குறட்செல்வம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

என்ற குறளுக்கு அறிவும் செல்வமும் உலக இயற்கையில் மாறுபாடுடையன. இவ்விரண்டும் உடைவவராக வாழ்வ தரிது என்பது புலால் வேட்கையுடையவன் கடவுள் பெயரால் பலியிட்டதைப்போலவே ஆகும்.

'திரு” என்ற சொல்லுக்குக் கண்டோரால் விரும்பப் படும் தன்மை' என்று பொருள் கொண்டார் பேராசிரியர். இது மிக சிறந்த கருத்து. கண்டோரால் விரும்பப்படும் தன்மையுடையவராக வாழ்தல் அரிய முயற்சியாகும்.

அறிவோ, ஆற்றலோ, வளம்பல உடைமையோ கண்டோரால் விரும்பத்தக்க வாழ்க்கையை வழங்கி விடுவதில்லை. தன்னலத் துறவும், பிறர் நலம் பேனும் வேட்கையும், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப்பார்க்கும் உண்மையும் கொண்டு தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை என்று கருதிக் கருதி இனிய அன்பால் அருளார் வத்தால் பலரைத் தழுவி வாழும் வாழ்க்கையே பலரால் விரும்பப்பெறும் வாழ்க்கை.

இதனையே, 'திரு” என்றார். தெள்ளிய அறிவு உடையோர் பலர் சமுதாய வாழ்க்கையில் தோற்று இருக்கின்றனர். அறிவின் காரணமாகவே பலரையும் ஆராய்ந்து பகை வளர்த்துக்கொண்டவர் இல்லையா? அறிவுடையோர் என்ற முனைப்பால் அழிந்தவர்கள் இல்லையா? அறிவுடையோரெல்லாம் அன்புடையோராக இருப்பதில்லை என்ற ஐயத்தின் வினாவே. -

அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின்கோய் தன்கோய்போல் போற்றாக் கடை.

என்பது குறள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/144&oldid=1276480" இலிருந்து மீள்விக்கப்பட்டது