பக்கம்:குறள் நானூறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காம இன்பத்துக்காக மனைவி இட்ட வழிச் செல் வது பெண்வழிச் சேறலாம். அவ்வாறு மனைவி இட்ட ஏவலைச் செய்து நடப்பவன் ஆண் தன்மை இல்லா தவன். அவனேவிட நாணம் கொள்ளும் பெண் தன்மையே பெருமையுடையது. 291

நல்ல நெற்றியழகு வாய்ந்த மனைவியின் விருப்பம் போல் அவள் இட்ட வழி நடப்பவர் தன்னோடு நட்புக் கொண்டவரது குறைகளையும் தீர்க்கமாட்டார்; நல்ல பயனுள்ளவற்றைச் செய்யும் வலிமையைப் பெறவும் மாட்டார். 4. 2.92

பரத்தையர் பொருளுக்காகவே பொருள் தரு வோரைத் தழுவுவர். அது அன்புத் தழுவல் ஆகாது: பொய்த் தழுவல். அவளேக் கூடித் தழுவுதல் எந்த வகைத் தொடர்பும் இல்லாத பிணத்தைத் தழுவுவது போன்றதே ஆகம். 393

திருமணம் பெற்றுத் தம் வாழ்வை நல்ல ஒழுக்க எல்லைக்குள் நிறுத்தாத பரத்தையர் சிறந்த அணிகலன் களே அணிந்து அழகோடு விளங்கிலுைம், அவர்களது மெல்லிய தோள் ஒரு சேறு. அது மேன்மையற்ற கயவர்கள் அழுந்தித் தவிக்கும் சேறு ஆகும். 294

செல்வத்தால் நீக்கப்படுபவர்க்குத் தொடர்பு மூன்ருகும். அவை, வேறுபடும் இருமனம் படைத்த பரத்தையரும், மயக்கும் கள்ளும், கவிழ்க்கும் சூதாட்ட மும் ஆகும். 295

320

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/132&oldid=555629" இலிருந்து மீள்விக்கப்பட்டது