பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இ. புலவர் கா. கோவிந்தன்

வளமைசால் உயர் சிறப்பின், நுந்தை தொல்வியன்நகர், இளமையான் எறிபந்தோடு இகத்தந்தாய் கேள்இனி; பூந்தண்தார்ப் புலர்சாந்தின் தென்னவன் உயர்கூடல் தேம்பாய அவிழ்நீலத்து அலர்வென்ற அமர்உண்கண், ஏந்துகோட்டு எழில்யானை ஒன்னாதார்க்கு அவன்வேலின்

- 10

சேந்துநீ இனையையால் ஒத்ததோ? சின்மொழி! பொழிபெயல் வண்மையான் அசோகம்தன் காவினுள் கழிகவின் இளமாவின் தளிர்அன்னாய்! அதன்தலைப் பணைஅமை பாய்மான்தேர் அவன்செற்றார் நிறம்பாய்ந்த கணையினும் நோய்செய்தல் கடப்புஅன்றோ? கணங்குழாய்

15

வகையமை தண்தாரான் கோடுஉயர் பொருப்பின்மேல் தகைஇணர் இளவேங்கை மலர்அன்ன சுணங்கினாய்! மதவலி மிகுகடாஅத்து அவன் யானை மருப்பினும் கதவவால் தக்கதோ, காழ்கொண்ட இளமுலை;

எனவாங்கு, 20

இணையணகூற, இறைஞ்சுபு நிலம்நோக்கி, நினையுபு, நெடிதொன்று நினைப்பாள்போல் மற்றுஆங்கே துணைஅமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள், மனையாங்குப் பெயர்ந்தாள் என்அறிவு அகப்படுத்தே.”

இது கைக்கிளை. இதற்கு விதி: தொல்: பொருள்: 50 1. வேய்-மூங்கில், வெறி- மணம், வணர் - கடை குழன்ற:2. தளர்பு - தளர்ந்து, ஒல்கி - ஒதுங்கி, 3. அரி - சிலம்பின் உள்ளே இடும் மணிகள், அவிர் - விளங்குகின்ற இழை - அணிகள்; 5. தெரிகல்லா - தெரியாத, கவர்பு - விரும்பி, 7. இகத்தந்தாய் - புறப்பட்டவளே!8.தார் - மாலை, தென்னவன்- பாண்டியன்;9. தேம்