பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மன்றத்து மடலேறுவேன்

வாரி முடித்து வகை வகையாகப் பின்னிவிட்ட கூந்தல். வளைந்த முன் கை. முழங்கால் அளவும் செல்லு மாறு நீண்டு மெத்தென்ற தோள்கள். பேரழகு பொருந்திய மலர் போன்ற மை தீட்டிய கண்கள். அழகிய பெண் மானின் பார்வை போலும் மருண்ட பார்வை. மழை மாறாது பெற்றுத் தளிர்த்த மாந்தளிர் மேனி. பிறைத் திங்கள் போல் ஒளி திகழும் நெற்றி, முல்லை அரும்பை வென்ற கூரிய வெண்ணிறப் பற்கள். கொடி போல் சிறுத்த இடை - இவை போலும் உறுப்பு நலன்களால் ஆய இயற்கை அழகு வாய்க்கப் பெற்றாள் ஓர் இளம் பெண். இத்தகு இயற்கையழகுடையாளை, அவள் பெற்றோர், தம் செல்வ வாழ்விற்கேற்ப, வகை வகையான வனப்பு மிக்க ஆடை அணிகளால் மேலும் அழகு செய்தனர். இயற்கை யழகும், செல்வச் சிறப்பாலாய செயற்கையழகும் வாய்க்கப் பெற்ற அவள், காலில் சிலம்பொலிக்க,