பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 49

இன்பம் பெறவே எண்ணுகிறான். அவள் விரும்புமாறு, அவளை மணந்து கொள்வான் வேண்டி, அம்மணத்திற் காம் பொருள் சேர்க்கும் பணிமேற்கொண்டுள்ள மையினாலேயே வந்திலன் என்பதைத் தோழி அறிவாள். ஆகவே, அப்பெண் பழித்துப் பாடியது கேட்டு, வாளா இருந்துவிடாது, அவன் புகழ்பாடும் மற்றொரு பாட்டை மீண்டும் பாடத் தொடங்கினாள். தொடங்கியவள், அவன் அத்தகையன் என்பதை, அப்பெண் உணரவல்ல சில செய்திகளைத் தன் பாடற் பொருளாகக் கொண்டு பாடி னாள். "தான்் விரும்பும் பெண் யானை, முதன் முதலாகக் கருவுற்றதாக, அஃதறிந்து மகிழ்ந்து, கருவுற்றிருக்குங் காலத்தில் அது ஆசைப்படும் பொருள் எதையும் தவறாது தருதல் வேண்டும் எனத் துணிந்து, அவ்வாறே, நீண்டு வளர்ந்து, நன்கு முற்றிச் சுவை பெற்றிருக்கும் கரும்பின்மீது அதற்கு ஆசை உண்டாக, அது கிடைக்கும் இடம் தேடிச் சென்று, முறித்துக் கொணர்ந்து தரும் ஊக்கமும், உரனும் மிக்க யானைகளை நிறையக் கொண்டது, அவன் மலை. அவன் நாட்டு விலங்குகள்பால் காணும் இப்பண்பு அவன் மாட்டும் பொருந்தியிருந்தல் இயல்பே. மேலும் இயல்பாகவே தன் காதலியை மணந்து கொள்ளும் முயற்சி மேற்கொண்டுழைக்கும் அவன், தன் நாட்டு யானையின் செயல் கண்டு, முன்னினும் முயன்று, மணவினையை விரைவில் முடிப்பன்!” .

இவ்வாறு, தோழி இளைஞனைப் புகழ்ந்து பாட, அப் பெண் அவனைப் பழித்துப் பாட, அப்போது ஆங்கு வந்த அவ்விளைஞன், அவ்விருவரும் அறியாவாறு, ஒரிடத்தே ஒளிந்திருந்து, அப் பாட்டை முழுதும் கேட்டான். கேட்ட அவனுக்கு, நமக்கு இன்பம் தரும்

குறிஞ்சி-4