பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி 73

மறந்தான்்; மறக்கு; இனி, எல்லா! நமக்குச் 5 சிறந்தன நாம்நற்கு அறிந்தனமாயின், அவன்திறம் கொல்யானைக் கோட்டால் வெதிர்நெல் குறுவாம் நாம் வள்ளை அகவுவம் வா; இகுளை! நாம் வள்ளை அகவுவம் வா.

காணியவா வாழி தோழி! வரைத்தாழ்பு, 10 வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம், அருளா நாண்இலி நாட்டு மலை! ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ ஒர்வுற்று ஒருதிறம் ஒல்காத நேர் கொல்

அறம்புரி நெஞ்சத்தவன்? 15 தண்ணறும் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம், பொன்அணி யானைபோல் தோன்றுமே, நம்அருளாக் கொன்னாளன் நாட்டு மலை! கூருநோய் ஏய்ப்ப விடுவானோ, தன்மலை

நீரினும் சாயல் உடையவன், நயந்தோர்க்குத் 20 தேர்ஈயும் வண்கை யவன்? - வரைமிசை மேல்தொடுத்த நெய்க்கண் இறாஅல் மழைநுழை திங்கள்போல் தோன்றும், இழைநெகிழ எவ்வம் உறீஇயினான் குன்று! -

எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி; 25 அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன், என் நெஞ்சம் பிணிக்கொண்டவன் என்று யாம்பாட, மறை நின்று கேட்டணன், தாழ் இருங்கூந்தல் என் தோழியைக் கைகவியாச்