பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இ. புலவர் கா. கோவிந்தன்

"வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்து ஏந்து மருப்பின், இனவண்டு இமிர்பு ஊதும் சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால், ஐவன வெண்ணெல் அறைஉரலுள் பெய்து இருவாம்

ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற மைபடு சென்னிப் பயமலை நாடனைத் தையலாய்! பாடுவாம் நாம்; தகையவர் கைச்செறித்த தாள்போலக் காந்தள் முகையின்மேல் தும்பி இருக்கும், பகை எனின்,

கூற்றம் வரினும் தொலையான்தன் நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன் குன்று? 'வெருள்புடன் நோக்கி வியல் அறை யூகம், இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் வருடை மான் குழவிய வளமலை நாடனைத்

தெருளத், தெரி இழாய், நீஒன்று பாடித்தை! நுண்பொறி மான்செவி போல வெதிர்முளைக் கண்பொதி பாளை, கழன்றுஉகும் பண்பிற்றே மாறு கொண்டு ஆற்றார் எனினும், பிறர் குற்றம் கூறுதல் தேற்றாதோன் குன்று;

புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட புணர்மருப்பு எழில்கொண்ட வரைபுரை செலவின் வயங்குஎழில் யானைப் பயமலை நாடனை மணம் நாறு கதுப்பினாய்! மறுத்துஒன்று பாடித்தை, கடுங்கண் உழுவை அடிபோல வாழைக்

15

20