பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 குறிஞ்சித் தேன் இழைக்கும் நாட்டை உடையவர் அவர். இனியதிலும் இனிய பொருள் தம் நாட்டிலே எங்கும் இருக்கப் பெற்றவர். அவர் நாட்டை நினைக்கும்போதே இனிக் கிறது.’’ ஆம்! அந்த நாட்டை நினேக்கும்போது மாத் திரமா? அந்த நாடனே நினேக்கும்போதுகூட, அப் போதுதான் மிக மிக இனிக்கிறது’ என்று தோழி மனத்துக்குள் சொல்லிக் கொள்கிருள். அவள் முகத் தில் புன்னகை தோன்றுகிறது. ...” தலைவி அந்தப் புன்னகையைப் பார்த்தாள். தான் சொன்னதைத் தோழி உணர்ந்து கொண்டாள் என்று தெரிந்து நாணி முகம் கவிழ்ந்தாள். அத்தகைய நாடைேடு நான் செய்த நட்பு நிலத்தைக் காட்டிலும் பெரியது; வானேக் காட் டிலும் உயர்ந்தது; கடலேக் காட்டிலும் ஆழ மானது. இதை உன்னுல் உணர முடிகிறதா??? என்று கேட்டு நிறுத்தினுள் தலேவி. நன்ருக உணர முடிகிறது. அன்றியும் அது குறிஞ்சித் தேனேவிட இனி மையானது என்பதையும் தெரிந்து கொண்டேன். என்று கூறிச் சிரித்தாள் தோழி. அந்தச் சிரிப்பு, தலைவிக்கு மாத்திரம் நாணத்தை உண்டாக்கவில்லை; மறைவாகப் புறத்தே ஒரு பக்கத்திலே நின்றுகொண்டு இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த தலைவன் முகத்தில் புன்னகையையும் உள்ளத்தில் பெருமிதத் தையும் மனத்தில் உறுதியையும் உண்டாக்கிற்று. ‘இனி இவளே மணந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான் அந்த உறுதி. தலைவியின் கூற்ருக அமைந்திருக்கிறது பாட்டு.