பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 குறிஞ்சித் தேன் ஆனல் இப்போது ஒரு பெரிய சங்கடம் முன் நின்றது. நான் போய்விட்டு வருகிறேன்’ என்று காதலியிடம் சொல்ல வேண்டுமே! அவள் அப்போது படும் துன்பத்தைக் கண் கொண்டு பார்க்க முடியாதே! - பொருள் தேடத் தான் செல்ல இருப்பதைத் தோழியின் மூலமாக உணர்த்தலாம் என்று முடிவு கட்டினன். அவளிடம் தன் கருத்தைக் கூறி, எப்படி யாவது தலைவியின் உடம்பாட்டைப் பெற வகை செய்ய வேண்டுமென்று வேண்டினன். தோழி முதலில் தியங்கிலுைம் பொருள் அவசியம் என்பதை உணர்ந்து ஒருவாறு, த லேவன் பிரியப்போவதைச் சொல்வதாக ஏற்றுக்கொண்டாள். தலைவியை அணுகினள். o в о தோழி : தோழி, இறைவனுடைய திருவருளால் உங் கள் இல்லறம் இனிது நடைபெறுகிறது. இதை அறிந்து ஊரில் உள்ளவர்கள் யாவரும் பாராட்டு கிருர்கள். தலைவி : யாரைப் பாராட்டுகிருர்கள்? தோழி : உன்னேயும் உன் காதலரையுந்தான். தலைவி : என்னேப் பாராட்டுவதற்குப் பொருள் இல்லை. நான் என்ன செய்தேன்? எனக்கு ஆசைப்படத் தெரியும். என் ஆசையை நிறைவேற்றினவர் யாரோ அவரைத்தான் பாராட்ட வேண்டும். . இல்லறம் சிறப்பாக நடப்பது எம்பிரானுடைய முயற்சியினலேயன்றி என்னல் அன்று.