பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் அன்பும் 53 என்று சொல்வது அடுத்தபடி நிகழும் எல்லாவற் றையுந் தானே? தோழி: ஆம். தவிை : பொருளுக்காகச் செல்பவர் நம்மைப் பிரிந்து செல்வதல்ை நமக்கு உண்டாகும் துன்பத்தை அறியமாட்டாரோ ? - தோழி : வறுமையால் வரும் துன்பம் பின்னும் பெரி தல்லவா ? - தலைவி : என்னே வாழ்க்கைத் துணைவியாக அவர் ஏற் றுக்கொண்டார். துணைவி என்ருல் எப்போதும் உடன் இருப்பவள் என்றுதானே பொருள் ? தோழி ஆம். - தலைவி பிரிவில்லாமல் துணைவியருடன் வாழ்வோர் அறிவுடையவரா? துணைவியரைப் பிரிந்து செல் வோர் அறிவுடையவரா? தோழி : அவர் பொருள் ஈட்டத்தானே செல்கிருர்? தலைவி மனிதனுடைய வாழ்வில் வேண்டிய வசதி களைப் பெறுவதற்குப் பொருள் உதவும் என்பது உண்மை. பொருள் வந்தால் லாபம் என்றும், போனுல் நஷ்டமென்றும் சொல்வார்கள். பொருள் பற்றிய எண்ணம் உடையவர்கள் லாப நஷ்டம் பார்க்க வேண்டும் அல்லவா? தோழி : பொருள் பெற்று வருவது லாபந்தானே? தலைவி கையிலே உள்ள பொருளை இழப்பது லாபமா, நஷ்டமா? . தோழி நஷ்டந்தான். . . தலைவி : இப்போது தலைவர் தம்மிடம் உள்ள பொருளே இழந்து விட்டு, தாமே துறந்து விட்டு, புதிய