பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 குறிஞ்சித் தேன் வைத்தியரைத் தேடவேண்டும்? கட்டுப் பார்க்கிற தென்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனல் தெளிவாகத் தெரியாது. சரி, உன் பூசையைத் தொடங்கு. குறத்தி பூசை போடத் தொடங்குகிருள். தன் குல தெய்வத்தையும் மலேயைக் காக்கும் தெய்வங்களே யும் பாட்டுப் பாடி அழைக்கிருள். உள்ளே தோழியும் தலைவியும் பேசிக்கொள் கிருர்சுள். தலைவி: இதென்ன? ஊரிலுள்ள தெய்வங்களே யெல் லாம் அழைக்கிருளே! எத்தனே விதமாக அழைக் கிருள் இத்தனே தெய்வங்களில் ஒன்ருவது இவ ளுக்கு உண்மையைச் சொல்லுமா? என் உடல் மெலிவுக்கு இன்ன காரணம் என்று உணர்த்துமா? தோழி: நீ ஏன் கவலைப்படுகிருய்? அந்தத் தெய்வங் கள் உணர்த்தாவிட்டால் நான் இருக்கிறேன். எப்படியாவது தெரிவித்து விடுகிறேன். எத்தனே நாளைக்கு நீ உன் காதலருடன் ஒருவரும் அறியா மல் அளவளாவுவது? ஒவ்வொரு நாளும் நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு அவரைச் சந்திக்க வேண்டியிருக்கிறதே! - - தலைவி: அவர்கள் இந்தப் பைத்தியக்காரக் கிழக் குறத்தியைக் கூட்டிக்கொண்டு வந்து அமர்க்களப் படுத்துகிருர்களே! உன்னேக் கேட்டால் உண்மை யைச் சொல்லுவாயே! • தோழி: இருக்கட்டும், இருச்கட்டும். வெளிப்படை யாக உண்மையைச் சொல்லிவிடமுடியுமா? சமயம் பார்த்துக் குறிப்பாகத் தெரிவிக்கவேண்டும். தெ