பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணில் ஆடும் முன்றில் 83 தோழி தலைவியின் பேச்சிலே ஈடுபட்டாள். அவள் அறிவையும் அழகையும் வியந்தாள். அவள் உள்ளத்தே ஒரு புதிய எண்ணம் ஒடியது. நம்முடைய தலைவியின் அழகும் அறிவும் பண்பும் இப்போது மலர்ச்சி பெற்று நிறைந்திருப்பதைக் கண்டு வியந் தோம். இதுவும் ஒரு திருவிழாத்தானே? திருவிழாக் காலத்தில் ஊர் எவ்வளவு அழகாக இருக்கிறது! மறைந்திருந்த அழகுப் பொருள்களும் உணவுப் பொருள்களும் மற்றவையும் விழாவிலே வெளிப்படு கின்றன. தலைவியினிடம் இப்போது அழகும் அறிவும் பண்பும் தோன்றியதைப்போல அல்லவா அவை வெளியாகின்றன? நம் தலைவி இப்போது திருவிழா நடக்கும் ஊரைப்போல இருக்கிருள். மகிழ்ச்சியின் உச்சியிலே பொலிவுடன் விளங்குகிருள். இதற்குமுன் விழா இல்லாத ஊரைப் பார்த்தோம். இவள் முன்பு இருந்த நிலை அதைப் போன்றதாகத் தோன்றியது. இப்போது விழாவைப் பெற்ற ஊரைப் பார்க்கிருேம். இவள் எழிலும் அறிவும் பண்பும் பொங்க நிற்கிற தற்கு அதை உவமை கூறலாம். முன்பு காதை சிறப்புக்களெல்லாம் இப்போது இரண்டிடங்களிலும் வெளிப்படுகின்றன. - விழாக்கொண்ட ஊரையும் எழில் நிறைந்த தலைவியையும் பார்த்துப் பார்த்துத் தோழி ஆனந்தம் அடைந்தாள். - - 事 அன்று வெளியூரிலிருந்து ஒரு விருந்தினர் வந் திருந்தார். தலைவியும் தலைவனும் அவருக்கு வேண் டிய உபசாரங்களைச் செய்தார்கள். அவர் தமிழ்நாட்டில்