பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

發 குறிஞ்சித் தேன் தலைவி இதற்குக் குடும்பம் இருக்கிறதா? தோழி உலகம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. வழி வழியே உயிரினங்கள் பெருகி வருகின்றன. மனித இனம் பெருகுவது போலவே மற்ற இனங்களும் பெருகுகின்றன. குடும்பம் இல்லாமல் இனம் பெருகுமா? தலைவி ஆண், பெண், குழந்தைகள் என்ற குடும்பம் குருவிக்கும் உணடா? தோழி : தெரியாதவள் போலப் பேசுகிருயே! நம் டைய வீட்டின் இறைப்பிலே குருவிக் குடும்பம் வாழ்வதை நீ அறியாயா - தலைவி : குடும்பம் இருந்தாலும் குருவிக்குக் கவலை இல்லை; நாளேக்கு வேண்டும் என்ற நினைப்பு இல்லே. -- தோழி உணவைப் பொறுத்தவரையில் அதற்குக் கவலே இராமல் இருக்கலாம். ஆல்ை வேறு ஒரு திறத்தில் குருவியும் முன்கூட்டியே ஏற்பாடு செய்து விடுகிறது. இறைவன் அதற்கும் அத்தகைய அறிவைக் கொடுத்திருக்கிருன். தலவி என்ன ஏற்பாடு? ጎ தோழி அது நம் வீட்டு இறைப்பில் சும்மா வாழ வில்லை; அங்கே மெத்தென்ற வீடு கட்டிக் கொண்டு வாழ்கிறது. தனக்காக இல்லாவிட்டா லும் தன் மனைவிக்கும் அது முட்டையிடுவதற்கும் முட்டை பொரிந்தபின் குஞ்சுகள் வாழ்வதற்கும் விடு ஒன்று வேண்டுமென்று முன்பே எண்ணி அது அந்த வீட்டைக் கட்டிக்கொள்கிறது. நாம் கட்டியுள்ள விட்டின் இறைவானத்தில் அதுவும் கூடு கட்டிக்கொள்கிறது. -