பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவிக் குடும்பம் . تعی-سسسست தலைவி : குருவியின் வாழ்க்கையே இன்ப வாழ்க்கை தான். அதோ பார்; குருவி பறந்து போகிறது. அந்தஇடத்தில்உள்ளசாணத்தைக்கொத்துகிறதே. தோழி காய்ந்த சாணம் அது. அதைக் கொத்தி விளையாடுகிறது. அதனுடைய நுண்ணிய பொடியை வீட்டுக்குப் பூசுமோ என்னவோ? எருவின் நுண்ணிய தாதைக்குடைந்து விளையாடுகிறது. எதற்காக என்று நமக்குத் தெரியவில்லே. நாம் பெரிய அறிவுடையோம் என்று சொல்லிக் கொள்கிருேம். - தலைவி : வேண்டியதை உண்டு, மனம் போலப் பறந்து விளையாடித் தன் குஞ்சுகளுடனும் பேடை யுடனும் இறைவானத்து வீட்டில் வதியும் குருவி யைக் கண்டால் எனக்குப் பொருமையாக இருக் கிறது. நாமும் குருவியாகப் பிறந்து வாழலாம் என்று தோன்றுகிறது. தோழி என்ன அப்படிச் சொல்கிருய்? உன் தலைவர் பிரிந்து சென்றிருக்கிருரே அதை நினேந்து வருத்தம் உண்டாகிறதா? தலைவி : அவரை நினைக்காமல் இருக்க முடியுமா? ஆனல் அவர் கடமையின் பொருட்டுப் பிரிந்து சென்றிருக்கிருர் என்பதை நான் அறிவேன். தோழி : இல்லே, இல்லை. நீ உன் துன்பத்தை மறைத்துப் பேசுகிருய். குருவியாக வாழலாம் என்று சொன்னயே, அதுவே உன் பிரிவுத் துன்பத்தைக் காட்டவில்லையா? . தலைவி : குருவியின் விடுதலே பெற்ற வாழ்வை நினேந்து சொன்னேனே யன்றி, வேறு நினைவு, எனக்கு இல்லை. - -