154 கு று ங் தொ ைக க்
கிருன். நெஞ்சை விட்டு வெளியே வரவில்லை வார்த்தை. ஆனல் என்னவோ இனிமையாகப் பார்க்கிருன்’
‘கள்ளுப் பானையைப் பார்த்துப் பார்த்து இன்புறும் குடி காரன் போல நிற்கிருனே?”
“ஆமாண்டி!’
‘ஐயோ பாவம்’
சேரி சேர மெல்ல வந்து வந்து, அரிது வாய்விட்டு இனிய கூறி, வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன் பைதல் நோக்கம் கினையாய்-தோழி!இன் கடுங் கள்ளின் அகுதை தங்தை வெண் கடைச் சிறுகோல் அகவன் மகளிர் மடப் பிடிப் பரிசில் மானப் பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறகிலேயே. - -பரணா
139. கூண்டுக் கிளி
“என்னவோ அம்மா எனக்குத் தெரிந்தது இது. சொல்லி விட்டேன்’ என்றாள் தோழி.
“என்ன சொல்லேன்’ என்றாள் அவள்.
‘இரண்டு பேரும் ஒடிப் போங்கள்’
‘எவர் இரண்டு பேரும் ?”
‘நீயும் உன் காதலனும்’
‘ஒடிப் போய் ?”
‘ஒடிப்போய். வேறு எங்கேயாவது கலியாணம் செய்து கொண்டு விடுங்கள்’
“அப்படியா ?”
“ஆமாம்”
“அவர் இதற்குச் சம்மதிக்க வேணுமே”
‘அவனும் இதையே சொல்வான். அதற்கு முன்னல் நான் சொல்கிறேன்’