174 கு று ங் .ெ தா ைக க்
வெளியே வந்தாள். வேலி அருகே அவன் நின்று கொண்டிருந் தான். இருவரும் வேகமாக ஒடினர்.
பொழுது விடிந்தது. படுக்கையைப் பார்த்தார்கள். அவளேக் காணுேம். எங்கேயாவது குளத்தங்கரைக்குப் போயிருப்பாள் என்று எண்ணியிருந்தனர். நேரம் ஆயிற்று; அவளேக் காணுேம். எங்கே அவள் என்று தேடினர்.
“ஏன் தேடுகிறீர்கள் ? பட்சி பறந்து போயிற்று’ என்றாள் தோழி. -
“அப்படியா?’ என்றாள் செவிலி.
‘ஒடிப் போய் விட்டாளா ?’ என்றாள் தாய்.
‘ஒடு I பிடி விடாதே 1’ என்று சீறினர் சிலர்.
“சும்மா ஏன் பதறுகிறீர்கள். இவ்வளவு நேரம்:tதாலி கழுத் தில் ஏறியிருக்கும்’ என்றாள்.
- ஏறி யிருக்குமா ?”
‘ஆலமரத்தடியிலே நாலு ஊரார் கூடிச் செய்த திருமணம் போலத் தானே?”
‘ஆம் அப்படியேதான்’
மேள தாளம் உண்டோ ?”
- உண்டு.”
பறை படப் பணிலம் ஆர்ப்ப, இறை கொள்பு தொல் மூது ஆலத்து, பொதியில் தோன்றிய நாலூர் கோசர் நன் மொழி போல வாயாகின்றே தோழி! ஆய் கழல் சே இலை வெள் வேல் விடலை யொடு தொகு வளே முன் கை மடங்தை நட்பே.
-ஒளவையார்
155. வாழ்வும் வருத்தமும்
“ஏன் அழறே!” என்று கேட்டாள் தோழி. ‘நான் என்னடி செய்வேன்?” ‘ஏன்? என்ன வந்து விட்டது உனக்கு?’’