68 கு று ங் ெத ா ைக க்
“வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது’
ஆமாம்”
‘குடும்ப சுகம் எப்படி?’’
‘ஆ ! அதையேன் கேட்கிறீர்கள்’’
‘என்னப்பா ?’’
‘சொல்ல முடியாத சுகம் போங்கள்!”
‘சொல்ல முடியாமல் என்ன ?”
‘கல் கண்டு ! கல் கண்டு ‘
‘தித் திக்குதோ ?”
‘நீர் சூழ்ந்த கில உலகும், பெறுதற்கு அரிய சுவர்க்க போக மும் அதற்கு ஈடாகா’
“எதற்கு ?’’
‘மலர் போன்ற மைக் கண்ணும் பொன் போன்ற மேனியும் கொண்ட அவளைத் தழுவும் இன்பத்துக்கு!’ -
‘அப்படியா சபாஷ் 1 பெண் இன்பத்தின் முன்னே வான மும் வையமும் என்ன செய்யும் என்று கேட்கிறாய், ஆ !’
“ஆமாம் ! ஆமாம்!”
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும், அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும், இரண்டும், தூக்கின், சீர் சாலாவே - பூப் போல் உண்கண், பொன் போல் மேனி, மாண் வரி அல்குல், குறுமகள் தோள் மாறுபடுஉம் வைகலொடு எமக்கே.
-பரூஉ மோவாய்ப் பதுமன்
42. மயிலின் வெறியும் மங்கையின் நெறியும்
மலே காட்டிலே உள்ள குறவன் என்ன செய்கிருன் ? தினை விதைக்கிருன். தினை பயிராகிறது. நன்றாகச் செழித்து வளர் கிறது. பலன் தருகிறது. அறுவடை செய்கிருன். இவ்வளவு நல்ல தினேயை அளித்ததற்காக முதல் பிடியை முருகனுக்குக் காணிக்கையாக அளிக்கிருன்.