பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

###

பொருள் தேடிப் போயின் இளமையும் போமே!

பொருள் ஈட்டி வந்து பேரறம் பல புரிந்து புகழ் நிறைந்த வாழ்வினராகவே வாழ்வின் பயனும்; அப்பெரு வாழ்வை, உலகிற் பிறந்தார் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும் என்பதெல்லாம் உண்மை, ஆளுல் அப்பொருளை சட்டி வருவது அத்துணை எளிதில் நிகழ்ந்து விடாது; மேலும் அப்பொருள் ஊருக்கு அண்மையில் கிடைப்பதும் இல்லே, சேளுடுகளில் மட்டுமே அச்செல்வம் கிடைக்கும்; அந்நாடு கள் செய்மைக்கன் இருப்பது மட்டுன்ைறு; அந்நாடுகளுக்கு இடையில் உள்ள வழிகள் தேரும் குதிரையும் துைட யின்றி விரைந்தோடவல்ல தகுதியுடையவையுமல்ல.

காடுகளின் ஊடே நுழைந்தும், மஃகன் மீது ஊர்ந்தும் செல்கிறது அவ்வழி; அவ்வழியை விரைந்து கடத்தல் இயலாது. செல்லுமிடத்தில் பெரும் பொருளைக் குறுகிய காலத்தில் ஈட்டிவிடினும், அவ்வழியைக் கடந்து வரச் சேணெடும் காலம் சென்றுவிடும். அதற்குள் இளமைாழி முதுமை வந்தடையும், முதுமையுற்ற பின்னர், வாழ்வில் இன்பம் கானல் இயலாது. இன்ப நுகர்வின்றியே இள மையைக் கழிக்க வேண்டி நேரிடும். இளமை பயனற்றுப் போகும். இழந்த இளமையையும், அவ்விளமைக் காலத்து இன்பத்தையும், மீண்டும் பெறுதல் இயலாது. புகழை யும், புகழ் விளக்கும் பொருளையும், வாழ்வின் எந்தப் பருவத் தில் வேண்டுமாயினும் பெறுதல் இயலும்; இளமையில் பெற வேன்டினும் பெறலாம்; முதுமையில் பெறவேண்டினும் பெறலாம்; இன்பது கர்வு அது போன்றதன்று; அதை க், தாம் வேண்டும் பருவத்தில் பெறுதல் இயலாது; இன்ப நுகர்விற்கு ஏற்ற பருவம் இளமைப் பருவம் ஒன்றே. இளமையை இன்ப நுகர்விற்குப் பயன் கொள்ளாது கொன்னே அழித்தவர் இன்பத்தை நுகர்தல் இயலாது; அவரளவில் இளமையும், இன்பமும் இறந்தனவே ஆம்.

“ஒருகால், மனேவி, இன்ப நுகர்வுக்கு ஏற்றவனல்லளா பின், கணவன், தன் இளமை உணர்ச்சிகளை அடக்கிக்