பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

கொண்ட காதல், மேலும் மேலும் வளர்ந்து, பயனளித்தலை வேண்டுவையாயின், அவரும் நானும், ஒருவரை விட்டு ஒருவர், இமைப் பொழுதும் பிரியாது கூடி வாழ்தல் வேண்டும்; அந்நிலை எம் திருமணம் ஒன்றினலேயே உன் உாம்; அத்திருமணம் எத்துணை விரைவில் நடைபெறு கிறதோ அத்துணையும் நன்று; அது விரைவில் நிகழாதேல், எம் காதல் அழிவது உறுதி; காதலை அழியவிட்டு யான்மட்டும் உயிர் வாழ்தல் இயலாது. யானும் இறந்து போவேன்; இதையெல்லாம் உணராது, பிரிந்து போய் மறைந்து வாழும் அவரை என்னென்பேன்! குறையுடையார் அவர் என உண ராது, காத்திருத்தல் வேண்டும்’ என எனக்கு அறிவுரை கூறும் உன் அறிவுத் திறனை என்னென்பேன்” என வெறுத்துக் கூறினுள். -

தாய் இல் முட்டை போல உள் கிடந்து

சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தோ! யாமைப் பார்ப்பின் அன்ன காமம், காதலர் கையற விடினே.” 2 அவர் நட்புப் பகையாயிற்று : -

ஒர் ஆண் மகன், ஒரு பெண்ணே, அவளை ஈன்றதாய் தந்தையர் அறியா நிலையில் காதலித்துச் சின்னுள்வரை சிறிது பொழுதும் பிரியாதிருந்து பேரின்பம் தந்து, பின்னர்த் திரு மணத்திற்குத் தேவைப்படும் இருநிதி சேர்த்துக்கொண்டு விரைவில் வந்துவிடுகிறேன்” எனக் காரணம் காட்டிப் பிரிந்து போய், நாள் பல ஆகியும் வாராணுயின், அந்நிலையில் அப்பெண்ணின் துயர் எத்துணை கொடிதாம் என்பதை தோழி அறிவாள். அவன் உண்மையில் நல்லவன், நம்புதற்கு

a குறுந்தொகை 152. கிள்ளிமங்கலங்கிழார்.

சாயின் அல்லது. அழிதல் அல்லது பிறிது எவன் உடைத்து-வேறு என்ன உறுதி உடைத்து, யாமை-ஆமை; பார்ப்பு-அதன் குஞ்சு. காமம், கையறவிடின், சாயினல்லது பிறிதெவன் உடைத்து என மாற்றிப் பொருள் கொள்க.