பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் - 11 பணம் செலவுடுறது தேவைபான்னு கலெக்டர் யோசிக்காராம் டில்லியில இருக்கற என் மவன், நம்ம கலெக்டரோட மொஸொரியில ஒண்ணா டிரெயினிங் எடுத்தவன் அவன விட்டு கலெக்டருக்கு 'ஸ்ட்ராங்கா' எழுதச் சொல்லியிருக்கேன் எழுதிட்டதா என் மவன் லட்டர் போட்டதும் போவோம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுடா " "அப்புறம் அந்தத் தங்கையாட்டம் வகையறா, நான் வசூல்ல தில்லுமுல்லுப் பண்ணினதா பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க நான் பொண்டாட்டி நகையை அடகு வச்சி வாங்குன மாட்ட 'நன்கொடை மாடு ன்னு கிண்டல் பண்ணுறாங்களாம் நீங்க கொடுத்த பதவின்னு பாக்குறேன். இல்லன்னா என்னைக்கோ ராஜினாமா செய்திருப்பேன் " "டேய் ராஜினாமா ராஜினாமான்னு அடிக்கடி மிரட்டாதேடா. இப்படித்தான் சர்ச்சிலோட அப்பா ராண்டோப் சர்ச்சில், தன்னோட மந்திரி பதவியை ராஜினாமாப் பண்ணப் போறதா பிரதம மந்திரிகிட்ட மிரட்டினாரு. கடைசில அந்தப் பிரதமரு பண்ணுடான்னுட்டான் மனுஷன் வேறு வழியில்லாமப் பண்ணிட்டு, அவஸ்தைப் பட்டான் இப்படி ஏடாகோடமாய் மிரட்டாதே." "நான் மிரட்டல அண்ணாவி நாம, ராவும் பகலுமா கருமிப் பயலுக வீட்டிலகூட பழியாக் காத்துக்கிடந்து, நன்கொடை பிடிச்சோம். ஒரு அஞ்சு பைசா கூட எடுத்தது கெடையாது ஆனால் அவங்க, என் மாட்டை 'நன்கொடை மாடு'ன்னு கிண்டல் பன்றதைக் கேட்க வேதனையா இருக்கு " அண்ணாவி, ராமசாமியைக் கனிவடன் பார்த்தார். பிறகு அவரின் பெருவிரலைப் பிடித்துக் கொண்டே, "நீ ஏன்டா கவலைப்படுற? பரம்பர பரம்பரையாய் பஞ்சாயத்துச் சொத்தை அனுபவிச்சவங்க அவங்க, நீயும் தேனை எடுத்த கையோட, புறங்கையை வாய்க்குக் கொண்டு போயிருப்பேன்னு நினைக்கிறாங்க போலிருக்கு எனக்குத் தெரியும் எந்தப் பயல எப்படிச் சமாளிக்கனுமுன்னு சரிடா, உன் வேலையைப் பாரு, எனக்கு வேலை இருக்கு நம்ம மாடசாமி பொண்ணுக்கும், பெருமாள் பேரனுக்கும் பொருத்தம் பார்க்கனுமுன்னு என்னைத் துளைச்சி எடுக்கிறாங்க நான் வர்ரேன் " ராமசாமி அண்ணாவி போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு பெரிய சுமை இறங்கியது போலிருந்தது