பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 35 பிறகு அது குணமானாலும் அவனின் அஞ்சாமைக் குணம் போய்விட்டது இதைத் தெரிந்தவர்கள் போல, மூன்று மாதத்துக்கு முன்னால் காரை வீட்டார்கள், முத்துப்புதியவனின் இளைய மகன் வேலுவை, விலாவில் இரண்டு இடி கொடுத்துவிட்டார்கள் முத்தையனின் ரத்தம் கொதித்தாலும், நாலு நாளில் அது ஆறிய சோறாகியது காரை வீட்டார்கள் பழையபடி வாலாட்டத் தொடங்கியபோது சின்னசாமிக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி கிடைத்ததில், முத்தையனுக்கு ஒரே மகிழ்ச்சி இனி ஒரு பயலும் வாலாட்ட மாட்டான் அவன் பெரியய்யா மகள்களும், சின்னையா மகள்களும் கெளரவத்தோடு நடக்கலாம் பெண் கேட்டு வருகிற வெளியூர்க்காரர்களை, "இந்த ஒலை வீட்டுப் பயல்க வீட்டிலேயா சம்பந்தம் வைக்கப் போறிய? பேசாம வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்கய்யா" என்று கேவலமாகப் பேசிய காரை வீட்டார்களே, சின்னசாமிக்குப் பெண் கொடுக்கலாம் சீச்சீ இந்தப் பயல்க வீட்டிலேயா சம்பந்தம் வைக்கிறது? ஒரு நாளும் நடக்காது முத்தையன் இன்பக் கற்பனையில் திளைத்தவாறே, ஏற்கனவே சாகப் போவது போல் இருந்த வண்டி மாடுகளை முந்நூறு ரூபாய்க்கு விற்றான் தெரு முழுதும் பந்தல் தென்னை ஒலையால் ஜொலித்த பந்தலுக்குக் கீழே, சலவைத் தொழிலாளி கொடுத்த Gsణడు 0 ఉ கட்டினான் வாழை மரங்களை நட்டு உள்ளுர் நையாண்டி மேளக்காரனை ஒரு போடு போடச் சொன்னான் ஸ்பீக்கர் வைத்து. ஒரு ரிக்கார்ட் டான்சுக் காரியைக் கூட்டிக் கொண்டு வந்து ஆடச் சொன்னான் குடும்பத்தில் இப்போதுதான் இந்த மாதிரி ஒரு விழா நடப்பதில், முத்துப்புதியவனும் பெருமிதம் அடைந்தார். அண்ணன் பிள்ளையை விட, தென்னம் பிள்ளை மேல், என்யாங்க இந்தப் பயபிள்ளை தென்னை மரத்தை வித்துல்ல செலவளிக்கிறான்' என்று முத்தையனின் மீது தனிப்பாசம் கொண்டார் முத்தையனின் மனைவி, இவன் இருக்கிற சொத்தை வித்து. செலவளிப்பதைக் கண்டு முணுமுணுத்தாள் காரைவீட்டார்கள், அழைக்காமல் வந்தார்கள் அவர்களுக் குள்ளேயே சண்டை வந்தால், சப்-இன் ஸ்பெக்டர் சின்னச்சாமியின் தயவு தேவை என்பது அவர்களுக்குத் தெரியும் அழையா விருந்தாளிகளைப் பார்த்ததும், முத்தையனின் உள்ளம் கொதித்தது. பெரியய்யாவிடம் போய், "பெரியய்யா, இந்த நாறப்பய மக்க வெக்கம் மானமில்லாம வந்திருக்கான் பாத்தீங்களா இவங்கள நீரு போகச் சொல்றீரா, நான் சொல்லட்டுமா?" என்றான் தன்னையும், பெண்டு