பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 குற்றம் பார்க்கில் அறைக்குள் போய்விட்டார். ஆத்திரத்தைக் கொட்டினார் கமிஷனர். "என்ன லார் நீங்க, கார் ஏற்பாடு பண்ணியிருப்பேனேன்னு கலெக்டர் முன்னாலே சொல்லுறீங்க, அவன் என்னைப் பத்தி என்ன நினைப்பான்?" "சரித்தான் சார், உங்களால் எனக்கும் கெட்ட பேரு வரணுமா? கலெக்டருக்குக் கார் ஏற்பாடு செய்யமுடியாத தாசில்தாரும் ஒரு தாசில் தாரான்னு என் தலையில் அவன் கை வச் சா?" சில நிமிஷங்களுக்குள் சாப்பாட்டுத் தட்டுகளையும் உணவு வகைகளையும், கர்ணங்களும் முன்சிபுகளும் சுமக்க, பண்டாரம் முன்னே வந்தான். ஊர்வலம் கலெக்டர் அறைக்குள் புகுந்த உடனேயே பாத்திரங்களின் ஒலி பலமாய்க் கேட்கத் தொடங்கிவிட்டது. பசியாறிய கலெக்டர் புன்முறுவலோடு வெளியே வந்தார். குச்சியால் பல்லைக் குத்திக் கொண்டே, "சாப்பாடு ஏ ஒன், கோலிக் கறி ஏ ஒன். ஒன்டர்புல்!" என்றார். தாசில்தார் குமாஸ்தா பண்டாரத்தின் காதைக் கடித்தார் கர்ணம் ஒருவரை இழுத்துக் கொண்டு பண்டாரம் வெளியே ஓடினான். சிறிது நேரத்தில் வியர்க்க விறுவிறுக்கத் திரும்பி வந்த பண்டாரம், கர்ணத்தின் கையிலிருந்த கோழி ஒன்றைப் பிடுங்கி, பியூனிடம் கொடுத்தான். "என்னா மேன், கரப்ட் பண்ணுறே? கோலி கொடுத்து இன்புளுயன்ஸ் செப்யறேன்னு சஸ்பெண்டு செய்துடுவேன் சஸ்பெண்டு!" பண்டாரம் பதறிப் போப், "சார், சார், கோழி சீப்பு லார், ஒரு ரூபாய் தான் சார். அதனால்தான் வாங்கினேன்" என்றான். கலெக்டர் ஆச்சரியப்பட்டுப் போனார். "வாட் ? ஒரு கோலி ஒரு ரூபாயா? ஒண்டர்புல் அங்கே எல்லாம் ஒரு கோலி டென் ருபீஸ்"