பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 குற்றம்-பார்க்கில் பயல், வெட்கம் மானம் இல்லாமல் இன்னும் போறான். போறது மட்டுமா? இடது கோடியில் இருந்து வலது கோடிக்கு சைட்' வாங்கறான்! அவள் கையில் உரசுறது மாதிரி நடக்கிறான். அவள் முறைக்கிறாள்.பயல் நடக்கிறான் w பொன்னப்பன் தன் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டார். அதோ, அந்தப் பயலும், அவளுக்காகக் காத்து நிற்கிறான். மீண்டும் அவள் கையில் உரசுற மாதிரி அவள் கூடச் சேர்ந்து நடக்கிறான். அவள் முறைக்கிறாள் - உதவிக்கு ஆள் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்க்கிறாள். மாட்டிக்கிட்டான், பயல் மாட்டிக் கிட்டான். மைனரை மடக்குவதற்காக வேகமாக பாலோ பண்ணினார். என்ன அக்கிரமம் அவன் ஏதோ கேட்கிறான். அவள் தயங்குகிறாள். அப்புறம் கையோடு கைசேர்த்துக் கொண்டு திரும்பி நடந்து வர்றாங்க...சே இவ்வளவு சீக்கிரத்தில் அவள் சம்மதிச் சிட்டாளே... தன்னைக் கடந்து போன அந்த ஜோடியை முறைத்துக் கொண்டே அவர் நடந்தார். டு டயர்' பக்கம் வந்தார். ஓர் ஆசாமி, முதுகைக் காட்டிக்கிட்டு நிற்கிறான், அவனைப் பிடிக்கலாம். அவர், அவனுக்கு நாலடி தள்ளி நின்றார். திடீரென்று அந்த இடத்தையும் காலி செய்தார். அவன் திரும்பும்போது, அவன் முகத்தில் இருந்த வெட்டுக் காயத்தின் பெரிய தழும்பைப் பார்த்துவிட்டார். அவர் அனுபவப்பட்டவர். வெட்டுத் தழும்பு உள்ளவன்கிட்ட மோதவே கூடாது. 'த்ரி டயர் பக்கம் நடந்தார் சே ஒரு பயலும் சிக்கவில்லையே. சபதத்தை எப்படி நிறைவேற்றுவது? ஒரு பன்னாடைப் பயல் கூடக் கிடைக்கலே...சே. அவரது அலைமோதிய கண்கள், ஒர் ஆசாமி மீது நிலைத்தன. பொருத்தமான கேஸ் பிடிச்சிடலாம். அந்த ஆசாமி ஓர் உளுத்துப் போன டிரங்க்' பெட்டியைக் கையில் வைத்துக் கொண்டு நிற்க, அவன் மனைவி, ஓர் அலுத்துப் போன குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றாள். சரியான கேஸ். பிடிச்சிடலாம். அவர், அவர்களுக்குப் பத்தடி தள்ளி நின்று கொண்டார்.