பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 67 ராமசாமி இருக்காங்களா?" என்றார். 'ஒரு ராமசாமி கூட இல்ல; ரெண்டுக்கு எங்கே போறது என்று சொல்லப்போன படிக்கட்டுக்காரர் தற்செயலாக, கடைக்காரரின் மெய்ப்பாடுகளைக் கவனித்தார். 'இந்த வியாபாரிங்களே சுத்த மோசம் இவங்களை ஒழிச்சிக் கட்டிாைத்தான், நாடு உருப்படும். இப்படி மனத்தில் நினைத்துக் கொண்டு பேசப்போன அதே நபரின் கண்கள் இன்ஸ்பெக்டருக்குத் தெரியாமல், கும்பிடும் கடைக்காரரின் கைகளைப் பார்த்தன. கடைக்காரர் தம் சைகைகளை விரிவுபடுத்தினார். தனது கழுத்தைச் கற்றி இரண்டு விரல்கள் வட்டம் போட்டார். (அவருக்குக் கல்யாணம் ஆகிவிட்டதாம்.) கீழே ஒரு கையையும், அதற்கு மேலே ஒரு அடி தள்ளி இன்னொரு கையையும் காண்பித்துவிட்டு எட்டு விரல்களை நீட்டிக் காண்பித்தார் (அவருக்கு எட்டுப் பிள்ளைகள் இருக்காம்.) பிறகு கீழே பூமியை நோக்கி விரல்களைக் குவித்துவிட்டு, பின்னர் அதே கையை வாய்க்குக் கொண்டு வந்தார். (அவர் வாயில் மண்ணைப் போட்டுவிடக் கூடாதாம் ) படிக்கட்டு ஆசாமிக்குத் தாராள மனசு எல்லாந் திருடனுங்க இவனும் திருடுகிறான் ஒழிஞ்சி போறான் இவனைப் பிடிச்சிக் கொடுக்கிறதில என்ன லாபம்? இப்போ உதவினால், நாளைக்குக் கார்டு இல்லாமலே எல்லாம் வாங்கிக்கலாம். அந்த லட்சிய வீரரின் மனம், இரக்கத்தின் மீது உட்கார்ந்தது. செக் கிங் மீண்டும் கேட்டார். "ராமசாமி இருக்கிறது மாதிரி இராமசுவாமி இருக்காரா?" படிக்கட்டார் சிரித்தார் "நான்தான் ராமசாமிங்கிறது. இன்னொரு ராமசாமி இருக்கான் அவன் இப்போ, அரிசி வாங்கப் போயிருக்கான் " இன் ஸ்பெக்டர், அந்த பாரதபிரஜையின் பதிலினால் திருப்தியடைந்தார் கடைக்காரரும் அவரும், கடைசியில் குடிசை மாற்று வாரியத்'துக்குள் நுழைந்தார்கள் 318 ஆம் நம்பர் மாரியாத்தாவைக் கண்டார்கள். "ஏம்மா, ரேஷன் கார்டு கீதா?" "கீது. ஆனால் இப்போ .."