பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 குற்றம் பார்க்கில் "காத்தமுத்து ஆடாதே ரத்தினமே குதிக்காதே" என்று கூச்சலிட்டது. இதைக் கேட்டதும் உதிரமாடசாமிக்கு ஒரே மகிழ்ச்சி. அம்மன் சாமியையும் இழுத்துக் கொண்டு தன் பீடத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இதற்கிடையே "இரண்டு பேருமே ஆடட்டுமே" என்றார் ஒருவர். 拳 "அதெப்படி? யார் சுடலைமாடன்னு தெரிய வேண்டாமா?" என்றார் ஒரு சந்தேகவாதி. ஒசியில் கிடைக்கும்போது மட்டும் பேப்பர் படிக்கும் ஆசாமி ஒருவர் "ரத்தினம் ஆடுவது ஸ்தாபன சுடலைமாடன். காத்தமுத்து ஆடுவது, ஆளும் சுடலைமாடன் என்று வச்சுப்பமே" என்றார். "அது இப்ப பாஷன் இல்லிங்களே. அப்பா ஆடினதைத்தான் ஆடுறதா ரத்தினம் சொல்றதால அதுக்கு 'அப்பா சுடலைமாடன்'னு பேர் வைக்கணும் காத்தமுத்து ஆடுறதை வெறும் கடலை மாடன்'னு கூப்பிடணும்" என்று வேறொருவர் வியாக்கியானம் செய்ததைக் கூட்டத்தார் ஒப்புக் கொண்டார்கள். வடிவு கெட்டிக்காரி: பிடித்துக் கொண்டாள். "இவரு அப்பா சுடலைமாடசாமி சும்மா தப்பா ஆடாதசாமி" என்று வடிவு துணிந்து அவள் பாடியதை ரத்தினம் கோஷ்டியினர் கரகோஷம் செய்து வரவேற்றார்கள். உடனே காத்தமுத்து ஆதரவாளர்கள் "ஏடி, அப்பா சுடலைக்கா ஆதரவு கொடுக்கறே? லோலாக்கு பிஞ்சிடும் பிஞ்சி" என்று எச்சரித்தார்கள். வடிவ பயந்து போய், "இவரு அப்பாவே இல்லாத சாமி எல்லார்க்கும் அப்பாவான சாமி என்று பாடினாள். அப்பா சுடலைமாடசாமி தரப்புக்கு ஆத்திரம் பொங்கியது. உடனே எதிர்க்கோஷங்கள் கிளம்பின. ஐயாசாமி பதறிப்போய் இன்னும் கதறிக் கொண்டிருந்தார்: "டேய் .. நா சொல்றதக் கேளுங்கடா ஒரு காலத்துல சாமியாடினா சபை 'கப்புசிப்புனு' அடங்கும். இப்போ எவன்தான்