பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.-சமுத்திரம் 93 சாமியாடறதுன்னு கணக்கே இல்லாமப் போயிடுச்சு. சாமிகளும் ஒளிஞ்சுகிட்டுதுங்க. இவனுங்க ரெண்டுபேரும் சுடலைமாடசாமி இல்லாம போயிரலாம். ஒரு வேளை மாடன், ரெண்டு பேரையுமே ஆட்டி விளையாடலாம். நீங்க சும்மா இருந்தீங்கன்னா சாமி ஆவேசம் இல்லாதவன் கொஞ்ச நேரத்துல டப்புன்னு நின்னுடுவான். சத்தம் போடாதீங்கடா. நீங்க சாமிங்களெயே பிரிக்கப் பாக்குறீங்களே..." ஐயாசாமியின் அப்பீலுக்கு சக்தி இல்லை. "ரெண்டு பேரும் ஆடக்கூடாது ஆட முடியாது." "காத்தமுத்துதான் ஆடவேண்டும், ரத்தினத்தை ஆடவிட மாட்டோம்." "ரத்தினம் ஆடியாகவேண்டும்" "காத்தமுத்து ஒடியாக வேண்டும்" என்பன போன்ற கோஷங்கள் மேன்மேலும் எழும்பின. ஐயாசாமி தள்ளாடிக் கொண்டே கோவிலிலிருந்து வாக் அவுட்' செய்தார். 'வாழ்க ஒழிக" கோஷங்கள் வெகு தூரத்திற்கு அவரைத் துரத்தின.