பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 97 பண்டாரம், இந்த அவமானத்திற்குக் கூட, அதிகமாக வருத்தப்படவில்லை. கடைசியில் பயல், பணம் கொடுக்க மாட்டானோ? அவன் மூளை, கம்யூட்டராகியது. விற்பனையாளரின் டயரியையும், டுர் புரோக்ராமையும் ஒப்பிட்டுப் பார்த்தான். பிறகு நாற்காலியில் இருந்து கொண்டே குதித்தான். பண்டாரம், மானேஜருக்கு ஒரு நோட்' "புட்டப் பண்ணினான். 'சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவ் சிவராமன், கம்பெனி வானுக்கு கோயம்புத்துர் பெட்ரோல் ஸ்டேஷனில், புதன்கிழமை மாலை நான்கு மணிக்கு பெட்ரோல் போட்டதாக பில் கொடுத்திருக்கிறான். ஆனால், அந்தப் புதன்கிழமை, மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு, கன்னியாகுமரியில் இருந்ததாக 'டூர்' டயரியில் எழுதியிருக்கிறான். அது எப்படி முடியும்? ஆகையால், சிவராமன், கம்பெனியை மோசடி செய்திருக்கிறான். அவன் டுர் போனானா அல்லது கோயம்புத்துரில் இருந்தானா? விற்பனை செய்யும் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சிவராமன், பொறுப்பாக நடந்து கொள்ளாதது மட்டுமல்ல, கம்பெனிப் பணத்தை டுர் என்ற பெயரில் செலவழித்து மோசடி செய்திருக்கிறான். அவனுக்கு "உன்னை, ஏன் டிஸ்மிஸ் செய்யக்கூடாது?" என்று கேட்கும் ஷோகாஸ் நோட்டீஸ்' கொடுக்க வேண்டும். சிவராமன் போன்ற நேர்மையற்றவர்களைக் கம்பெனியில் வைத்திருப்பது தப்பாகும்' பண்டாரம் எழுதிய நோட்டிஸ்ை மானேஜர் தங்கசாமி படித்துக் கொண்டிருந்தார். அவரின் ஸ்டெனோ அங்கே வந்தாள். தங்கசாமி "எஸ்" என்று இழுத்தார். "லார், நான் சொல்றதைத் தப்பா நினைக்காதீங்க. மிஸ்டர் பண்டாரத்திற்கும் சிவராமனுக்கும் தனிப்பட்ட விரோதம். அதனால்தான், பண்டாரம் அவர் உத்தியோகத்துக்கே உலை வைக்கிறார்." மானேஜர் ஸ்டெனோ மங்கையை ஒரே ஒரு வினாடி ஏறிட்டு நோக்கினார். பிறகு "மிஸ்டர் பண்டாரம், ஆபீஸ் ரூலைக் காட்டி மோசடின்னு கரெக்டா எழுதியிருக்கார். எனக்கு ரூல்ஸ்தான் முக்கியம். அவங்க தனிப்பட்ட விரோதத்தைப் பத்தியோ, கூட்டுறவு விரோதத்தைப் பத்தியோ எனக்குக் கவலையில்லை" என்றார் மங்கைக்கு மனசு கேட்கவில்லை அதுவும், ஆஜானுபாகான சிவராமன் மாட்டிக் கொள்வது, அவளுக்குத் தான் மாட்டிக் g5. Var."7