பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போக்குவரத்து-போட்டோக் கலை 59 தன் தலையிலோ முதுகிலோ சுமந்து சென் றான். பின்னர் மாடு, குதிரை, கழுதை, ஒட்டகம் போன்ற விலங்குகளைப் பழக்கி அவற்றைப் போக்குவரத்துக்குப் பயன் படுத்தினான். சக்கரமில்லாத சறுக்கு வண்டி (Sledge) பின்னர்ப் பயனுக்கு வந்தது. பனி நிறைந்த வட துருவப் பகுதியில் இன்றும் இச்சறுக்கு வண்டியைப் பயன்படுத்து கிறார்கள். அதன் பிறகு மனிதன் சக்க ரங்களை அமைத்து வண்டிகள் தேர்கள் போன்றவற்றைச் செய்தான். அவற்றில் மாடு, குதிரை, முதலியவற்றைப் பூட்டி இழுக்கச் செய்தான். இரும்பு, எஃகுத் தொழில்கள் வளர்ந்ததும், தண்டவாளங் களை அமைத்து, அவற்றின் மீது வண்டி களை ஏற்றி, குதிரைகளால் இழுக்கச் செய் தான். 'நீராவி எஞ்சின் அமைக்கப்பட் டதும் குதிரைகளு க் கு ப் பதிலாக எஞ்சின் இழுத்துச் செல்லும் ரெயில்கன் தோன்றின. உலகில் முதன் முதலாக இங்கிலாந்தில் ஸ்ட்டீவன்சன் (த.சு) என்பவர் 1825-ல் ரெயில் வண்டியை அமைத்து ஓட்டினார். இன்று உலகெங்கும் ரெயில்கள் முக்கியப் போக்குவரத்துச் சாதனமாகப் பயன்படுகின்றன. . 1885-ல் பென்ஸ் (Benz) என்ற ஜெர்மானியர் பெட்ரோலினால் ஓடும் மோட்டார் வண்டியைத் தயாரித்தார். 1897-ல் டீசல் (த.க.) என்பவர் உருவாக் கிய டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி மோட் டார் வண்டியை ஓட்டலாயினர். இதன் பின். மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி போன்ற மோட்டார் வண்டிகள் உலகெங்கும் முக்கியப் போக்குவரத்துச் சாதனங்களாயின. ஆறு. ஏரி, கடல் முதலிய நீர்வழிகளில் போக்குவரத்துக்கு முதலில் சாதாரண மரக்கட்டையைப் பயன்படுத்தினர். பிறகு கட்டுமரங்களையும் ஓடங்களையும் அமைத் துப் போக்குவரத்து நடத்தினர். பின்னர்த் துடுப்பினால் தள்ளும் படகை அமைத் தனர். நாளடைவில் கப்பல் தோன்றியது. முதலில் பாய்மரக் கப்பல், பின்னர் நீராவிக் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அணு சக்தியால் இயங்கும் கப்பல் முதலியன தோன்றின. டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி யும் படகுகளையும் சுப்பல்களையும் செலுத் தினர். இன்று ஆயிரக்கணக்கானவர் பயணம் செய்யக்கூடிய மிகப் பெரிய கப்பல்களும், பல்லாயிரம் டன் எடை யுள்ள சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாணிகக் கப்பல்களும், எண்ணெய்க் கப்பல்களும் உள்ளன. மூவகைப் போக்குவரத்திலும் கடைசி யாகத் தோன்றியது வான்வழிப்போக்கு பனிச்சறுக்கு வண்டி வரத்தாகும். பறவைகளைப்போல் தானும் வானத்தில் பறக்கவேண்டுமெனப் பண் டைக்கால மனிதன் பெரிதும் முயன்றான். 20ஆம் தூற்றாண்டின் தொடக்கத்தில் விமானத்தை அமைத்தனர். போக்குவரத் துச் சாதனங்கள் அனைத்திலும் மிக்க வசதி யானதும் விரைவானதும் விமானமே யாகும். இப்போது விமானங்கள் மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விரைவில் செல்ல முடிகிறது. விமானத்தில் மிக விரைவாகச் செல்லலாம். மலை, கடல் போன்ற தடைகள் இதைப்பாதிப்பதில்லை. உலகின் முக்கிய நகரங்கள் யாவும் விமானப் போக்குவரத்து மூலம் இணைக் சுப்பட்டுள்ளன. ஹெலிக்காப்ட்டர்களும் சிறு வேலைகளுக்குப் பயன்படுகின்றன. ஒலியின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகமாகச் செல்லக்கூடிய ஜெட் விமானங்களும் இன்று உள்ளன. போக்கு வரத்துச் சாதனங்களில் முக்கியமானவற் றுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு. போட்டோக் கலை (Photography ) : காந்தியடிகளை நீங்கள் பார்த்திருக்கமாட் டீர்கள். ஆனால், அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அவருடைய படங்களைப் புத்தகங்களிலும், பத்திரிகை கனிலும் அடிக்கடிப் பார்க்கிறீர்கள். இது எவ்வாறு முடிகிறது? அவருடைய உருவத் தைக் காமிரா (த.க.) மூலம் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இவ்வாறு பதிவு செய்த படத்தைப் போட்டோப் படம் என்கிறோம். போட்டோப் படம் எடுப் பதைப் பற்றியது போட்டோக் கலை. டால் சில ரசாயனப் பொருள்கள் ஒளிபட் மாறுதலடைகின்றன. இவற்றை ஒளி உணர்வுள்ள ரசாயனப் பொருள்கள் என்பர். இந்த ரசாயனப் பொருள்களே போட்டோக் கலைக்கு உதவுகின்றன.