பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்சாரம் நமக்கும் பல போன்றவை மின்சாரத்தைக் கடத்துவ தில்லை. இவை 'அரிதில் கடத்திகள்' (Poor conductors ) எனப்ப டும். கடத்தி ஒன்றின் மூலம் மின்சாரம் பாயும்பொழுது காந்தமண்டலம் உண் டாகும். ஒரு கம்பிச் சுருளினூடே ஒரு காந்தத்தை மிக விரைவாகச் செலுத் தினால், அக்கம்பிச் சுருளில் மின்னோட்டம் ஏற்படும். இந்த உண்மையைப் பயன் படுத்தி மின்னோட்டம் உண்டாக்கும் எந்திரம் ஒன்றை 1831-ல் பாரடே என்ற ஆங்கில விஞ்ஞானி அமைத்தார். இதற்கு 'டைனமோ ' (Dynamo) என்று பெயர். இதைத்தான் இன்று மின்னாக்கிகள் (Generators) என்கிறோம். முதலில் நிலக்கரி யைப் பயன்படுத்தி வெப்பம் உண்டாக்கி மின்னாக்கியை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்தார்கள். இதற்கு அனல் மின்சாரம் (Thermal power) என்று பெயர். பின்னர் அருவி, அணை இவற்றில் வேக மாக விழும் நீரைக்கொண்டு சக்கரங்களைச் சுழலச் செய்து மின்னாக்கிகளை இயக்கினார் கள். இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரம் நீர்மின்சாரம் (Hydro power) எனப்படும். இன்று அருவிகளிலும், அணைகளிலும் உள்ள மின்னாக்க நிலையங்களில் இவ்வாறே மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். இக் காலத்தில் அணுசக்தியினாலும் மின் சாரம் உற்பத்தியாகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு மின் சுற்றுப்பாதை (Circuit) அவசியம். மின்கலம் அல்லது மின்னாக்கியிலிருந்து மின்சாரம் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்று, மீண்டும் மின்கலம் அல்லது மின்னாக்கியை அடையும் வகையில் மின்சுற்றுப் பாதையை அமைக்கவேண் டும். இச் சுற்றுப் பாதையில் ஏதாவது சாரம் 21 5 வழிகளில் உதவுகிறது ஓரிடத்தில் தடை (Resistance) உண்டாக்கி விட்டால், மின்னோட்டம் நின்றுவிடும்; தடையை நீக்கிவிட்டால் மின்னோட்டம் மீண்டும் தொடங்கும்.தடையை உண்டாக்கியும் நீக்கியும் மின்னோட்டத் தைக் கட்டுப்படுத்துவதற்கு விசைகள் (Switches) பயன்படுகின்ற ன. சிலசமயம் வீட்டிலுள்ள விளக்குகள் எல்லாம் தாமாகவே அணைந்துவிடுவ துண்டு. இதற்கு என்ன காரணம் தெரியுமா? மின்சார இணைப்புக் கம்பிகளில் சிலசமயம் அளவுக்கு அதிகமான மின் சாரம் பாயக்கூடும். அப்போது மின்சாரக் கம்பி சூடாகி எளிதில் தீப்பற்றிவிடலாம். இவ்வாறு ஏற்படாமல் தடுக்க, மின்சுற்றுப் பாதையில் காப்புருகி (Safety fuse) என்னும் அமைப்பு உள்ளது. மின்சாரம் அளவுக்கு மீறிப் பாயுமானால், இந்த அமைப்பிலுள்ள கம்பி உருகி, மின் இணைப்பைத் துண் டித்து மின்னோட்டத்தைத் தடுத்துவிடும். இதனால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கப் படுகிறது. மழைக் காலத்தில் கண்ணைப் பறிக்கும் மின்னல் மின்னுவதைப் பார்த்திருப்பீர் கள். இந்த மின்னல் சக்திவாய்ந்த மின் சாரப் பொறியேயாகும். மின்னல் மின் சாரத்தினால் தான் தோன்றுகிறது என்பதை பிராங்க்லின் (த.க.) என்ற அமெரிக்க விஞ்ஞானி கண்டுபிடித்தார். மின்சாரவியலில் பலவித அளவுகள் பயன்படுகின்றன. மின்சுற்றுப் பாதையின் வழியாகச் செலுத்தப்படும் மின்னோட் டத்தின் விசையை வோல்ட்(Volt) என்ற அளவினால் அளக்கிறார்கள். மின்னோட்டத் தின் வலிமையை ஆம்ப்பியர் (Ampere) என்ற அளவில் கணக்கிடுகிறார்கள். மின்சார பல்பு. முதலியவை வாட் (Watt )