பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூச்சு கள் மூச்சுவிட உதவுகின்றன. மூச்சுக் குழலுடன் நுரையீரல்கள் இரண்டும் இணைத்திருக்கும். மூச்சுக் குழல் மார் பறைக்குள் இரண்டாகப் பிரிகிறது. ஒவ்வொன்றும் ஒரு நுரையீரலின் நடுவே புகுந்து கணக்கற்ற சிறு குழல்களாகப் பிரிகிறது. இவை நுரையீரலைச் சேர்ந்த மூச்சுச் சிற்றறைகளினுள் செல்கின்றன. மூச்சுச் சிற்றறை என்பது மிகச் சிறிய மெல்லிய காற்றறைதான். ஒவ்வொரு மூச்சுச் சிற்றறையின் உட்பகுதியிலும் தந்துகீகள் (Capillaries) எனப்படும் நுண் ணிய இரத்தக் குழாய்கள் பின்னிக் கிடக்கின்றன. நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போது காற்று மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக் குச் சென்று, மூச்சுச் சிற்றறைகளில் நிரம்பு கிறது. இந்தக் காற்றிலுள்ள ஆக்சிஜன் தந்துகிகளில் புகுந்து இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து அசுத்த இரத்தம் நுரையீரலுக்கு வரும். வரும். நாம் மூச்சை வெளியே விடும்போது அசுத்த இரத்தத்தி லுள்ள கார்பன் டையாக்சைடு கழிவுப் பொருளாக வெளியேறுகின்றது.இவ்வாறு நாம் சாதாரண நிலையில் நிமிடம் ஒன்றுக்கு 18 தடவை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுகிறோம். ஒவ்வொருவரும் பிறந்தது முதல் இறக்கும் வரை இவ்வாறு சுவாசிக்கிறோம். மூட நம்பிக்கை 45 உயிரணுக்களுக்கு அதிகமாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. போதுமான அளவில் ஆக்சிஜனைப் பெறுவதற்காக மூச்சு விடும் வேகமும் அதிகரிக்கின்றது. நம்மைப்போலவே குதிரை, மாடு, நாய், பூனை போன்ற முதுகெலும்புப் பிராணிகளுக்கும், மூச்சு விடுவதற்கென்று தனி உறுப்புகள் உண்டு. ஒரே ஓர் உயிரணுவால் ஆன அமீபா நீரில் கரைந் துள்ள ஆக்சிஜனைப் பெறுகிறது. நீரில் வாழும் மீனும் இவ்வாறே செவுள்கள் மூலம் ஆக்சிஜனைப் பெறுகிறது. தாவரங் களின் இலைகளில் நுண்ணிய துரைசுன் உள்ளன. இவற்றின்மூலம் அவை மூச்சு விடுகின்றன. பூச்சிகளின் உடலில் இரு பக்கங்களிலும் மிகச் சிறிய துளைகள் உண்டு; இவற்றின் மூலம் பூச்சிகள் சுவாசிக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மூச்சு விடுவதற்கென்று தனி உறுப்புகள் இல்லை. மூட நம்பிக்கை (Superstition) : சாலை வில் சென்று கொண்டிருக்கும்போது பூனை குறுக்கே ஓடினால், செல்லும் காரியம் வெற்றிபெறது என்று சிலர் நம்புகிறார் கள். எவரேனும் தும்மினால் அதைத் தீமைக்கான அறிகுறியாகச் சிலர் கொள் கிறார்கள். இந்தியாவில் மட்டுமன்றி மேலைநாடுகள் பலவற்றிலும் இத்தகைய மூடநம்பிக்கை கள் பல உள்ளன. மேனாடுகளில் பலர் '13' என்று எண் தீமை பயக்கும் ஓடும்போதும், உடற்பயிற்சியின்போதும் நாம் வேகமாக மூச்சு என்ற விடுகிறோம். இவ்வகைச் நம்புகின்றனர். செயல்களால் சக்தியைப் பொதுவாக அங்குள்ள பெருமளவில் நாம் பயன்படுத்தவேண்டி வீடுகளில் 13 என்ற எண் இருக்காது. யிருக்கிறது. 12ஆம் எண்ணுள்ள வீட்டுக்கு அடுத்த எனவே உடலிலுள்ள வீட்டை 12-A என்று குறித்துவிட்டு, அதற்கு அடுத்த வீட்டை 14 என்று குறிப் பிடுவர்! அதேபோல உணவுவிடுதிகளிலும் கப்பல்களிலும் 13 எண்ணுள்ள அறையே இருக்காது. மூச்சு மண்டலம் குரல்வளை மூச்சுக் குழாய் நுரையீரல்கள் (வெட்டுத் தோற்றம்) காற்றறைகள் மிகப் பழங்காலத்திலிருந்தே மூடநம்பிக் கைகள் இருந்துவருகின்றன. பேய், பிசாசு, பூதம் முதலியவை இருப்பதாகப் பழங் கால மக்கள் பெரிதும் நம்பினார்கள். இன்றும் ஒருசிலர் நம்புகிறார்கள். காரணம் சொல்ல முடியாத பல நிகழ்ச்சி களை இவைதாம் உண்டாக்குகின்றன என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அவற்றை வேண்டிக்கொண்டால் தீமை உண்டாகாது என்றும் நினைக்கிறார்கள். அதற்காக மந்திரங்கள் சொல்லப்படுகின் றன; ஆடு, கோழி முதலியவை பலியிடப் படுகின்றன. ஒருவர் ஒரு பொருளைப் பார்த்து 'அழகாக இருக்கிறது' என்று கூறினால் அந்தப் பொருளுக்குச் சேதமுண்டாகும்