பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூடுபனி மூலக்கூறு மூடுபனியின் அடர்த்தி குறைவாக இருந்தால் சிறிதுதூரம் வரையுள்ள பொருள்களை நாம் பார்க்கலாம்; அடர்த்தி அதிகமாக இருந்தால் சுற்றுப்புறமுள்ள பொருள்கள் நமக்குப் புலனாவதில்லை. மிகக் கடுமையான மூடுபனியிருந்தால் போக்கு வரத்து தடைபடும். விமானங்களை ஓட்ட மாட்டார்கள். கப்பல்களும் மோதிவிடக் கூடும். சாலைகளில் விபத்துகள் நேரிடு வதுண்டு. பெரிய தொழில்நகரங்களில், தொழிற் சாலைகளிலிருந்து எழும் புகையானது காற் றோடு கலந்து ஒருவகை மூடுபனி உண் டாகும். இது 'புகை மூடுபனி' (Smog) எனப்படும். பார்க்க : உறைபனி; பனி. மூலக்கூறு ( Molecule ): இவ்வுலகில் எத்தனையோ வகையான பொருள்கள் இருக்கின்றன. இவை யாவும், கண்ணுக் குப் புலப்படாத, மிகச் சிறிய அணுக்கள் (த.க.) சேர்ந்து உண்டானவை. சிறிய 47 உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் மைக் ராஸ்கோப்பினாலும் இவற்றைப் பார்க்க முடியாது. ஒரே வகை அணுக்கள் பல ஒன்று சேர்ந்ததுதான் தனிமம் (த.க.). இரும்பு அணுக்கல் மட்டுமே ஒன்று சேர்ந்து இரும்பு என்ற தனிமம் ஆகிறது. அதுபோலவே ஆக்சிஜன் அணுக்கள் பல ஒன்றுசேர்ந்து ஆக்சிஜன் என்ற தனிமம் ஆகிறது. வகை வகையான அணுக்கள் நூற்றுக்கு மேற்பட்டவை இவ்வுவகில் உள்ளன. ஒரு தனிமத்தின் அணுவைப் போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக் காது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் சேர்ந்ததுதான் மூலக்கூறு. இரண்டு ஹைடிரஜன் அணுக்கள் சேர்ந்து ஒரு ஹைடிரஜன் மூலக்கூறு ஆகிறது. இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் சேர்த்து ஓர் ஆக்சிஜன் மூலக்கூறு ஆகிறது. ஓசோன் (Ozone) என்று ஒரு வாயு உண்டு. இதில், ஒவ்வொரு மூலக்கூற்றிலும் மூன்று ஆக் சிஜன் அணுக்கள் இருக்கும். ஒரே வகை அணுக்கள்தாம் இவ்வாறு சேரும் என்பதில்லை. வெவ்வேறு வகை அணுக்களும் இவ்வாறு சேர்த்து மூலக்கூறு ஆகின்றது. ஒரேவகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளையுடையது தனிமம்; வெவ் வேறு வகை அணுக்கள் சேர்ந்த மூலக் கூறுகளைக் கொண்டது கூட்டுப்பொருள் ( Compound. த.க.) ஆகும். இரண்டு ஹைடிரஜன் அணுக்களும், ஓர் ஆக்சிஜன் அணுவும் சேர்ந்து, ஒரு நீர் மூலக்கூறு ஆகிறது.நீர் ஒரு கூட்டுப்பொருள்; தனிப் பொருள் அல்ல என்பது நமக்குத் தெரியும். இதை இன்னெரு வகையில் விளக்கிக் கூறலாம். ஒரு பாத்திரத்தில் நீர் இருக் கிறது. அதை இரண்டு பகுதிகளாகப் பிரிக் கலாம். அதில் ஒரு பகுதியை மேலும் பிரிக் கலாம். இவ்வாறு பிரித்துக்கொண்டே சென்னல், இறுதியில் ஒரே ஒரு நீர்த் துளி தான் மிஞ்சும். இதையும் தொடர்ந்து பருந்துக்கொண்டே சென்றால், கடைசி யாகக் கிடைப்பது ஒரே ஒரு நீர் மூலக்கூறு. இதற்கும் நீரின் தன்மைகள் இருக்கும். நீரின் தன்மைகளைக் கொண்ட, நீரின் மிகச் சிறிய பகுதியே நீர் மூலக்கூறு ஆகும். இதற்கு அடுத்த நிலை என்ன? இதையும் பிரித்தால் இரண்டு ஹைடிரஜன் அணுக்களும் ஓர் ஆக்சிஜன் அணுவும்தான் கிடைக்கும். பெரும்பாலும் எல்லா அணுக்களும் மற்ற வகை அணுக்களுடன் சேரக்கூடியன. அவை அவ்வாறு சேர்ந்து வெவ்வேறு வகை மூலக்கூறுகள் ஆகின்றன. இதனால் பல்வேறு தன்மைகளையுடைய ஏராளமான கூட்டுப்பொருள்கள் கிடைக்கின்றன.