பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் இமயமலையின் தெற்கு மலைச்சரிவுதான் உலகிலேயே மிகுதியாக மழையைப் பெறும் பகுதியாகும். இங்கு ஆண்டுக்கு 500 முதல் 1500 சென்டிமீட் டர் மழை பெய்கிறது. இங்குள்ள செர புஞ்சியில் (ஆசாம் மாநிலம்) ஆண்டுச் சராசரி மழை 1300 சென்டிமீட்டர் ஆகும். இந்திய சமுத்திரத்திலிருந்து ஈரம் நிறைந்த வெப்பக்காற்று, குளிர்மிகுந்த இமயமலைச் சரிவுகளைத் தாக்கும் பொழுது, அக் காற்று மேலும் குளிர்ச்சியடைந்து தென்பகுதியில் மிகுதியாக மழை பெய் கிறது. உயர்ந்த இமயமலை இவ்வாறு ஈரக் காற்றைத் தடுத்து விடுவதால், இமயமலை யின் வட பகுதிக்கு ஈரக் காற்று செல் வதில்லை. அதனால் அப்பகுதியில் ஆண்டுக்கு 25 சென்டிமீட்டர் மழைகூடப் பெய் வதில்லை. இவ்வாறு மழை குறைவாகப் பெய்யும் அல்லது மழையே பெய்யாத பகுதிகள் நாளடைவில் பாலைவனமாகி விடுகின்றன. இந்தியாவிலுள்ள தார் பாலைவனம், சீனாவிலுள்ள கோபி பாலை வனம், ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலை வனம், சிலியிலுள்ள அட்டகாமா பாலை வனம் போன்றவை இவ்வாறு உண்டானவையே.

செயற்கை முறையிலும் மழை பெய்யச் செய்யலாம். மேகத்தின் மீது திடநிலையி லுள்ள கார்பன் டையாக்சைடு அல்லது வெள்ளி அயோடைடைத் தெளித்து மேகத்தைக் குளிரச்செய்து மழை பெய்யும் படி செய்கிறார்கள். ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் முதலிய நாடு களில் இவ்வாறு செயற்கை முறையில் மழை பெய்ய வைக்கிறார்கள். இந்த முறை யைக் குறைந்த செலவில் எவ்வாறு கையாளலாம் என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.

மழை உரிய பருவத்தில் பெய்யு மானால் பயிர்கள் செழிக்கும்; விளைச்சல் பெருகும். பருவத்தில் மழை பெய்யாவிட் டால் நிலம் வறண்டுபோகும். பயிர்கள் கருகிவிடும்; பஞ்சம் தோன்றும்; உயிர்கள் மடியும். மழை அளவுக்கு மிகுதியாகப் பெய்தால் ஆறுகளில் வெள்ளப் பெருக் கெடுக்கும். கரைகள் உடைந்து ஊர்களுக் குள் வெள்ளம் புகுந்துவிடக்கூடும். மரங் கள் சாயும்; பயிர்கள் மூழ்கும். உயிர்களுக் கும் சேதம் உண்டாகும். எனவே, மழை குறிப்பிட்ட பருவங்களில் அளவோடு பெய் வதே நல்லது.

மனிதன் : உலகில் கோடிக்கணக் கான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற் றில் எல்லாம் உயர்ந்தது விலங்கினம். இவ் விலங்கினத்திலும் அறிவாலும் ஆற்றலாலும் முதன்மை பெற்று விளங்குபவன் மனிதனே ஆவான்.

முதுகெலும்புள்ள பிராணித் தொகுதி யில் பாலூட்டிகள் (த.க.) வகுப்பில், ஓர் இனத்தைச் சேர்ந்தவன் மனிதன். கபிகள் (Apes), சிம்ப்ப ன்சி, கொரில்லா, கிபன், ஊராங்-உட்டான் போன்ற குரங்குகள் பரிணாம (த.க.) வளர்ச்சியிலே மனித னுக்கு மிக நெருங்கிய விலங்குகளாகும்.

பூமியிலுள்ள உயிரினங்களில் எல்லாம் மிக அண்மையில் தோன்றியவன் மனித னேயாவான். தனக்கு முன்தோன்றிய பல உயிரினங்கள் முற்றும் அழிந்து போய்விட மனிதன் மட்டும் நிலைத்து வாழ்கிறான். அத்துடன் தன்னிலும் வலிமை வாய்ந்த பெரிய விலங்குகளை அடக்கியாள்கிறான். இதற்கு அவனிடம் மூளை, கை போன்ற சிறப்பான உறுப்புகள் அமைந்திருப்பதும், எத்தகைய தட்பவெப்பத்திற்கும், சூழ் நிலைக்கும் ஏற்ப வாழும் திறமை அவனுக்கு வாய்த்திருப்பதுமே காரணம்.

மனிதனின் கைகளும், கூர்மையான பார்வையுடைய கண்களும் சிறப்பான உறுப்புகளாகும். விலங்குகள், கைகளாகப் பயன்படுத்தக்கூடிய முன்கால்களை நடப்ப தற்கே பயன்படுத்துகின்றன. மனிதன் கால் களால் முற்றிலும் நேராக நிமிர்ந்து நின்று நடக்க முடிவதால், அவன் தன் கைகளை வேறு பணிகளுக்குத் திறமையாகப் பயன் படுத்த முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வேறு எந்த விலங்கையும்விட மனிதனுடைய மூளை சிறந்த முறையில் அமைந்துள்ளது. அவன் தன் மூளையைப் பயன்படுத்தித் தாவரங்களையும் விலங்கு களையும் தனக்குப் பயன்படும் வகையில் ஆக்கிக்கொண்டிருக்கிறான். மூளையின் திறனால், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்குரிய மொழியையும் அவன் உண்டாக்கிக்கொண்டிருக்கிறான்.

விலங்குகள் குறிப்பு ஒலிகளால் தங்களுக் குள் ஒரு சில கருத்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றன. எனினும், தன் கருத்து கள் முழுவதையும் பிறருக்குத் தெரிவிக்க வல்ல மொழியைப் பெற்றிருப்பவன் மனிதன் ஒருவனே. ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதால், மனிதர்கள் கூட்டாக வேலை செய்ய முடிகிறது. நாளடைவில் அவர்கள் தங்களுக்குள் வேலையைப் பகிர்ந்து கொண்டு சமூக வாழ்க்கை நடத்தவும் அறிந்து கொண்டார்கள். விஞ்ஞானத்தை வளர்த்து இயற்கையை யும் தம் வயப்படுத்தும் ஆற்றல் பெற் றார்கள்.

மனிதன் முதன்முதலில் எப்பொழுது, எவ்விடத்தில் தோன்றினான் என்பது சரியாகத் தெரியவில்லை. பூமியில் தொடக்