பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யானை - யுத்தம் ஆசிய யாளையைக்காட்டிலும் ஆப் பிரிக்க யானை பெரியது; காதுகள் பெரியவை; தந்தங்கள் நீளமானவை. ஆனால் தலை சிறியது. ஆப்பிரிக்க யானை களில் ஆண், பெண் இரண்டிற்கும் நீள மான தந்தம் உண்டு. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே நீளமான தந்தம் இருக்கும். பெண் யானையின் தந்தம் மிகச் சிறியதாக இருக்கும். ஆசிய யானையை எளிதில் பழக்கலாம். சர்க்கஸ் நிறுவனங்களிலுள்ள யானைகள் பெரும்பாலும் ஆசிய யானைகளே. இந்தியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடு சுனில், காடுகளில் வெட்டப்படும் மரங் களைத் தூக்கிச் செல்ல யானைகளைப் பயன் படுத்துகின்றனர். காட்டில் வாழும் யானையைப் பிடித்துப் பழக்குவதற்குப் பலமுறைகள் உள்ளன. இந்தியாவில் கையாளப்படுவது கெடா (Keddah) முறை எனப்படும். யானைகள் நடமாடும் பகுதியில் 21 மீட்டர் ஆழமும் 3 மீட்டர் அகலமும் உள்ள நீண்ட குழியை வெட்டுவார்கள். இதனுள் யானை இறங்கி வருவதற்கு, அதைக் கவரும்வகை யில் வழியில் கரும்பு, மூங்கில் முதலியவற் றைப் பரப்பி வைப்பார்கள். குழியினுள் யானை இறங்கியதும் வழியை அடைத்துவிடு வார்கள். ஏற்கெனவே பழக்கிய யானை சுளைக் கொண்டு, இந்த யானையைப் பிடித்து மரத்தில் கட்டி, அடக்கிப் பழக்குவார் கள். ஆண் யானைகளுக்குச் சில சமயம் மதம் பிடிப்பதுண்டு. மதம் பிடித்த யானை கட்டுப் பட்டு நடக்காது; கொடியதாக மாறி விடும். புலிபோன்ற கொடிய விலங்குகளை வேட் டையாடச் செல்வோர் யானைமீது செல்வ துண்டு. யாளையால் மக்களுக்குப் பிடிபட்ட யானைகளை மரத்தில் கட்டிவைக்கிறார்கள் பல - 69 பழகிய யானைகளைக் கொண்டு, பிடிபட்ட யாளைகளைப் பழக்குகிறார்கள். நன்மைகள் உண்டு. இதனைக் கருதியே. 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழ மொழி வழங்குகிறது. யுத்தம் (War) : இரண்டு நாடுகனின் படைகளிடையே நடக்கும் போராட் டத்தை 'யுத்தம்' என்கிறோம். சண்டை (Battle), போர் என்றாலும் இத்தகைய போராட்டத்தையே குறிக்கும். பகைமை கொண்ட இரு படைகள் காலாட் படையோ பீரங்கிப் படையோ, கடற் படையோ அல்லது விமானப் படையோ- ஓரிடத்தில் எதிர்ப்பட்டுச் சண்டை செய் வதைச் 'சண்டை' என்பார்கள். எடுத்துக் காட்டாக, ஆங்கிலேயருக்கும் சிராஜுத் தௌலாவுக்கும் பிளாசி என்னும் இடத் தில் நடந்தது 'பிளாசிச் சண்டை' (Battle of Plassey) எனப்படுகிறது. இவ்வாறு ஓரிடத்தில் மட்டும் சண்டை நிகழாமல் பல இடங்களிலும், பலவகையிலும் இரு நாடுகளிடையே சண்டை நிகழ்வதுண்டு. இப்படிச் சற்றுப் பெரிய அளவில், நீடித்த காலத்திற்கு நடக்கும் சண்டையைப் 'போர்' எனக் குறிக்கலாம். சில நாடுகள் ஒன்றுசேர்ந்து, வேறு சில நாடுகளுக்கு எதிராக நடத்தும் பெரும் போராட் டத்தை 'யுத்தம்' என்று அழைக்கிறேம். இந்த யுத்தம், பல மாதங்கள் அல்லது ஆண்டுகள்வரை நடக்கலாம். பலவகைக் காரணங்களால் யுத்தம் உண்டாகின்றது. ஒரு நாட்டில் மக்கள் தொகை பெருகி, மக்கள் வாழப் போதிய இடம் இல்லாமல் போகலாம். அப்போது புதிய நிலத்தைப் பிடிப்பதற்காகப் பிற நாடுகளின்மீது அந்த நாடு போர் தொடுப்ப துண்டு. ஆப்பிரிக்காவில் பிரிட்டன்,