பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 ராணுவம் - ராபியல் விமானப் படை, டாங்கிப் படை இவற்றின் உதவியுடன் தரைப்படையினர் பயிற்சி பெறுகிறார்கள். வீரர், வேறு எந்தப் பகுதியில் உள்ள நகரத்தையும் எளிதில் தாக்கக்கூடிய நவீன போர்க் கருவிகளும் இன்று செய்யப்படு இன்றன. ஒரு நாட்டின் ராணுவத்தில் தரைப் படை (..). கடற்படை (த.சு.), விமானப் படை (த.க.) என்ற மூன்று பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு படைக்கும், உடல் வலிமையும் அறிவுத் திறனும் வாய்ந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்தந்தப் படைக்குரிய பயிற்சிகளை அளிக்கிறார்கள். படையை அமைதி நிலவும் காலத்தில் நிலையான பெரும்படையைப் பராமரிக்க எல்லா நாடு களாலும் இயலாது. அந்நாடுகளில் குடிப் படை (Militia) என்னும் ஒரு அமைக்கிறார்கள். பொதுமக்களில் உடல் வலிமை, அறிவுத் திறன் முதலிய தகுதி உடையவர்களையும், முன்னாள் ராணுவத் தினரையும் இப் படையில் சேர்த்துக்கொள் வார்கள். அவர்களுக்கு விடுமுறை நாட் களில் படைப் பயிற்சி அளித்து இரண்டா வது வரிசை ராணுவமாக உருவாக்குகிறார் கன். ராணுவம் போரில் ஈடுபட்டிருக்கும் பொழுது,உள்நாட்டில் அமைதியைக் காக் கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் இப் படையினர் அரசுக்குத் துணையாக இருப்பார்கள். இந்தியாவில் 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் பல் இடங்களில் வாணிக நிலையங்களை நிறுவினர். அவற்றைக் காப்பதற்காகக் காவல்காரர்களை ஏற்படுத்தினர். இக் காவல்படையே பின்னர் இந்திய ராணுவ மாக உருவாகியது. 1947-ல் இந்தியா சுதந்தரம் பெற்ற பின்னர் இந்திய ராணுவம் சீர்திருத்தி அமைக்கப்பட்டது. குடிப்படையைப் போன்ற பிரதேசப்படை (Territorial Army), லோக் சகாயக் சேனை (Lok Sahayak Sena) என்ற இரு அமைப்புகள் இன்று இந்தியாவில் இயங்கிவருகின்றன. மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சியளித்து நாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஆர்வம் கொள்ளும்படி செய்வதற்காகத் தேசீய ராணுவப் பயிற்சிப் படையும் (த.க.) உள்ளது. இந்திய அரசியல் அமைப்பின்படி, முப்படைகளுக்கும் குடியரசுத் தலைவரே தலைமைத் தளபதியாக (Supreme Commander) இருக்கிறார். நடைமுறையில் ராணுவத்தின் நிருவாகப் பொறுப்பை மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சரகமும் (Ministry of Defence). மூப் படைகளின் தலைமைச் செயலகமும் ( Three Services Headquarters சுவளித்து வருகின்றன. முப்படைகள் ஒவ்வொன்றும் ஒரு பிரதமத் தளபதியின் Chief of Staff) கீழ் இயங்குகிறது. ராபியல் ( Raphael, 1483 - 1520): உலகப் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவர் ராபியல். இவர் நூற்றுக்கணக்காள அழகிய ஓவியங்களை வரைந்துள்ளார். மரியம்மையின் (த.க.) உருவத்தை ஒப்பற்ற ஒளியங்களாக இவர் தீட்டியிருக் கிறார். இவை இன்று லண்டன், பாரிஸ், பெர்ஸின், நியூ யார்க் முதலிய நகரங்களி லுள்ள பொருட்காட்சிசாலைகளில் இடம் பெற்றுள்ளன. ராபியல் இத்தாலி நாட்டில் ஊர்பினோ (Urbine) என்ற நகரத்தில் பிறந்தார். இவரது தந்தையும் ஓர் ஓவியர். ராபியல் தம் 11ஆம் வயதில் தந்தையை இழந் தார். ஆனால் அதற்குள் ராபியல் ஒலியம் வரைவதில் தம் தந்தையிடம் நல்ல பயிற்சி பெற்றுவிட்டார். விரைவில் ஒரு தனிமரபை வகுத்துக்கொண்டு இவர் ஓவியம் வரைய லானார். பின்பு, பிளாரன்ஸ் நகருக்குச் சென்று மைக்கலாஞ்சிலோ (த.க.). லியனார்டோ டா வின்சி (த.சு.) போன்ற புகழ்பெற்ற ஓவியர்களிடமிருந்து பல கலை நுட்பங்களைத் தெரிந்துகொண்டார். ராபியல் சிறந்த ஓவியராக மட்டுமின்றி, கட்டட நிபுணராகவும், சிற்பியாகவும் விளங்கினார். தொல்பொருளியல் துறையி லும் இவர் ஈடுபட்டு வந்தார். ரோம் நகரிலும் அதைச் சுற்றிலும் நடந்த அகழ் வாராய்ச்சிக்கு மேற்பார்வையாளராக இவரைப் போப்பாண்டவர் தேர்ந்தெடுத் தார். இவர் 37 ஆண்டுகளே வாழ்ந்த போதிலும் மிகக் குறுகிய காலத்தில் உலகப் புகழ் பெற்றார்.