பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

94. வைணவம்‌ - வையை ஆறு

வைட்டமின்‌ ந என்பது ஒரே வைட்ட மின்‌ என்று பல ஆண்டுகளாகக்‌ கருதி வத்தார்கள்‌. ஆனால்‌, இது பல பொருள்‌: கள்‌ அடங்கிய ஒரு தொகுதி (00929) என்பது பின்னர்‌ தெரியவந்தது. இத்‌ தொகுதியில்‌ இதுவரை 88 இனங்கள்‌ கண்டறியப்பட்டுள்ளன. மேலும்‌ பல. உயிர்ச்‌ சத்துகளும்‌ வைட்டமின்‌ ந இனத்‌ இல்‌ இருக்குமென விஞ்ஞானிகள்‌ கருது இருர்கள்‌. வைட்டமின்கள்‌ உணவுப்‌ பொருள்களில்‌ மிகச்‌ சிறிய அளவிலேயே உள்ளன. எனினும்‌, உடலின்‌ இயக்கத்‌ 'இற்கு இவை மிகவும்‌ இன்றியமையாதன வாக விளங்குகின்றன. மேலும்‌ ஒவ்வொரு வைட்டமினும்‌ உடலில்‌ ஏதாவது ஒரு வேலையைச்‌ செய்வதற்குத்‌ தேவைப்படு இறது. எனவே, நாம்‌ உடல்நலத்தோடு இருக்கவேண்டுமானால்‌, வைட்டமின்கள்‌. யாவும்‌ நாம்‌ உண்ணும்‌ உணவில்‌ போதிய அளவில்‌ இடம்‌ பெற்றிருக்கவேண்டும்‌..

இதுவரை கண்டுபிடிச்கப்பட்டுள்ள வைட்டமின்களில்‌ பெரும்பாலான வற்றைச்‌ செயற்கையாக மாத்திரை களாகவும்‌ மருந்தாகவும்‌. தயாரித்து, மலிவாசு விற்கும்‌ முறைகளை விஞ்ஞா. னிகள்‌ வகுத்துள்ளனர்‌. உணவின்மூலம்‌. போதிய அளவு வைட்டமின்கள்‌ கடைக்‌. காதபோது, இந்தச்‌ செயற்கை வைட்ட மின்களை. உட்கொள்ளலாம்‌. எனினும்‌. உணவின்‌ மூலம்‌ வைட்டமின்களைப்‌ பெறுவதே சிறந்தது. பார்க்க: உணவு.

வைணவம்‌ : சிவபெருமானை முழு முதற்‌ கடவுளாகக்‌ கொள்வது சைவம்‌; 'இருமாலை முதற்‌ கடவுளாகக்‌ கொள்வது வைணவம்‌. இருமாலை சமஸ்கிருதத்தில்‌.


என்பர்‌, விஷ்ணு என்பதற்கு உயிர்ப்பொருள்‌, _ உயிரில்லாப்பொருள்‌ அனைத்திலும்‌ நிறைந்து இருப்பவன்‌:

என்று பொருள்‌.

மூவாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பே. தமிழ்நாட்டில்‌ வைணவ சமயக்‌ கருத்து, கள்‌ பரவியிருந்தன; திருமாலுக்குக்‌. கோயில்கள்‌ இருந்தன. இதைத்‌ தொல்‌. காப்பியமும்‌, சங்க இலக்கியங்களும்‌ குறிப்‌ பிடுகன்றன. தமிழ்நாட்டில்‌ வேரன்‌; யிருந்த வைணவக்‌ கருத்துக்‌ நம்மாழ்வார்‌ முதலிய ஆழ்வார்கள்‌ (த.௧.). நாலாயிரத்‌ இவ்வியப்‌ பிரபந்தம்‌ மூலம்‌. பரப்பினார்கள்‌. எனினும்‌ இதை ஒரு (தனிச்‌ சமயமாக உருவாக்கியவர்‌ இரா. மானுசர்‌ (த.க.). “கடவுளுக்கு உலகமும்‌ உயிர்களும்‌ உடம்புகளாக உள்ளன. நாம்‌. அனைவரும்‌ கடவுளை அறியவேண்டும்‌; அதற்கு நாம்‌ அவரிடம்‌ அன்பு கொள்ள வேண்டும்‌; அவரிடம்‌ நம்மை அடிமை


களாக ப்படைத்துவிட _. வேண்டும்‌”. என்று ராமானுசர்‌ போதித்தார்‌. அவருடைய இந்தத்‌ தத்துவம்‌ “விசிட்‌ டாத்துவைதம்‌” எனப்படும்‌. இத்‌ தத்து. வத்தின்‌ அடிப்படையில்‌ வைணவ சமயம்‌ உருவாயிற்று. நம்பிள்ளை முதலாக மண வாள மாமுனிகள்‌ ஈறாகப்‌ பல ஆசாரி யர்கள்‌ வைணவ சமயத்தை நாடெங்கும்‌. பரப்பினார்கள்‌. இராமானந்தர்‌ என்பவர்‌. இச்‌ சமயத்தை வட நாட்டில்‌ பரவச்‌. செய்தார்‌.

வைணவக்‌ கொள்கைகளுக்கு. ஆசா. ரியாகள்‌ கொடுத்த விளக்கங்களையொட்டி. இச்சமயத்தில்‌ இரு பிரிவுகள்‌ ஏற்பட்டன. “பூனை தன்‌ குட்டியைத்‌ தான்‌ போகுமிட மெல்லாம்‌ தூக்கிச்‌ செல்லும்‌. அது: போல்‌, உண்மையான அடியவர்களை இறைவன்‌ தானே வத்து ஆட்கொள்வான்‌". என்று மணவாள மாமுனிகள்‌ விளக்கி. ஞர்‌. அவர்‌, தமிழிலுள்ள பிரபந்தங்‌ களை ஓதியே இறைவனை அடைந்துவிடலாம்‌. எனக்‌ கருதினார்‌. அவருடைய கொள்கை யைப்‌ பின்பற்றுபவர்கள்‌ “தென்கலை. யார்‌! என அழைக்கப்படுின்றனர்‌. “குரங்குக்‌ குட்டி தன்‌ தாயின்‌ வயிற்‌. ரோடு ஒட்டிக்கொள்வதுபோல, அடிய வர்கள்‌, தாங்களே இறைவனை இறுகப்‌. பற்றிக்‌. கொள்ளவேண்டும்‌” வேதாந்த தேகெருடைய அவர்‌, வடமொழி வேதங்களை ஓதுவ. 'தனுலேயே ஆண்டவனை அடைய முடியும்‌ என்று கருஇனார்‌. அவரைப்‌ பின்பற்றுப: வர்களை “வடகலையார்‌” என அழைப்பார்‌. கள்‌.

வையை ஆறு: தமிழகத்தில்‌ பாயும்‌ ஆறுகளில்‌ ஒன்று வையை. இதற்கு. வைகை என்றும்‌ பெயர்‌. இது மேற்குத்‌. தொடர்ச்ச மலையிலுள்ள வருஷநாடு என்ற பள்ளத்தாக்கில்‌ தோன்றி மதுரை, இராமநாதபுரம்‌ மாவட்டங்களின்‌ வழியே பாய்ந்து, ராமநாதபுரம்‌ நகருக்கு, அருலுள்ள பெரிய கண்மாய்‌ என்ற ஏரியில்‌ விழுந்து, இறுதியில்‌ பாக்‌ ஜல சந்தியுடன்‌ கலக்கிறது. வையை ஆற்றின்‌ நீளம்‌ 260 கிலோமீட்டர்‌, சுருளி, கிருத மாலை முதலிய ஆறுகள்‌ இதனுடன்‌ கலக்‌ இன்றன. மழைக்காலத்தில்‌ மட்டும்‌ வையை: ஆற்றில்‌ வெள்ளம்‌ பெருகும்‌. மற்ற. காலங்களில்‌ நீர்‌ ஓடாது. ஆற்றில்‌ நீர்‌ ஒட ம்பேரது அதை முழுவதுமாக £'வளாண்மைக்குப்‌ பயன்படுத்திக்கொள்‌ இருர்கள்‌. மதுரைக்கு மேற்கில்‌ ஆற்றின்‌ குறுக்கே ஓர்‌ அணை கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து பல கால்வாய்கள்‌ மூலம்‌