பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மன்னனும் வேதாந்தியும்
[கிரேக்க மன்னன் ஒருவனுக்கும் ஒரு வேதாந்திக்கும் நடக்கும் உரையாடல்]

 
மன்னன்-
எகிப்து நாட்டை எதிர்த்துநான்
இன்றே செல்வேன், படையுடன்.
மகிமை பெருக வெல்லுவேன்.
மகிழ்ச்சி பொங்கத் திரும்புவேன்.

வேதாந்தி - அப்புறம்...?

மன்னன் -
பார சீக நாட்டிலே
படை யெடுத்துச் செல்லுவேன்.
வீரப் போரை நடத்துவேன்.
வெற்றிக் கொடியை நாட்டுவேன் !
 
வேதாந்தி - ம்...அப்புறம்?

மன்னன் -
பார சீக நாட்டினைப்
படை யெடுத்து வென்றபின்
சீர்மி கும்நல் இந்தியா
தேசம் அதையும் வெல்லுவேன்.

வேதாந்தி - அதற்குப் பிறகு...?

91