பக்கம்:குழந்தை உலகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறகறுந்த குருவி 9i

பார்த்து ஏங்கிப் போன பெண் குருவி வீட்டுக் கதவை மூடிக்கொண்டு உள்ளே அழுதபடியே படுத்துக்கொண் டிருந்தது.

ஆண் குருவிக்கு, பேசாமல் போய் வீட்டிலே படுக் கையில் விழுந்துவிடவேண்டுமென்று இருந்தது. வீட்டுக்கு வந்து பார்க்கையில் கதவு சாத்தியிருக்தது. வேதனை தாங்கமாட்டாமல் முக்கி முனகிக்கொண்டு கதவைத் தட் ւգ-Ամ:. s

சானுன் கரிமுடிவான் சிறகை அறுத்துவிட்டான் கதவைத் திறவேண்டி காரணத்தைக் கேளேண்டி விளக்கை ஏற்றேண்டி வேதனையைத் தீரேண்டி

என்று தன் மனைவியை அழைத்தது.

உள்ளே படுத்திருந்த பெண் குருவி அவசர அவசர மாக ஓடி வந்து கதவைத் திறந்து ஆண் குருவியை உள்ளே அழைத்துப்போய்ப் படுக்க வைத்தது. அதற்குப் பசியே இல்லை. வயிறு நிறையத்தான் கள் குடித்திருக் கிறதே! பெண் குருவியிடம் மிகவும் வெட்கத்துடனே ஆண் குருவி எல்லாவற்றையும் சொல்லியது. ‘என்னிடம் சொல்லாமல் இப்படிப் போகலாமா ? கெட்ட பழக் கத்தைப் பழக்கிக்கொள்ளலாமா ?” என்று பெண்குருவி கேட்டது. ஆண் குருவி என்ன பதில் சொல்லும்?

'அந்தப் பாவி மரத்தில் ஏறும்போதே ஓசை கேட் டிருக்குமே. அதிலிருந்து தெரிந்துகொண்டிருக்கலாதா?”

ஒலை சல சலெங்க ஓடிவந்தால் ஆகாதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/100&oldid=555217" இலிருந்து மீள்விக்கப்பட்டது