பூனையின் வேஷம் 97
'இனிமேல் யாரும் வ&ளயை விட்டு வெளியிலே போகக் கூடாது” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டன.
தங்கள் குழந்தைகளைத் தின்று எப்பம் விட்ட கிழட்
டுப் பூனை எப்படியிருக்கிறதென்று பார்க்கச் சில பெரிய எலிகள் வெளியிலே வந்தன. பூனேயை அணுகிப் பார்க் தன. அது ஜபம் செய்வதுபோல வாயை முனு முணுத் துக் கொண்டிருந்தது. கொட்டாவி விட்டது. அதைப் பார்த்த எலிகள், - -
"பூனையாரே பூனையாரே!
கொட்டாவி விடுகிறீர்; குறு குறு என்கிறீர்;
கொட்டை நூற்று உண்டால் ஆகாதோ !” என்று கேட்டன.
என்றும் இல்லாதபடி எலிகள் தன் இனக் கேள்வி கேட் பது தெரிந்த பூனே, கண் தெரியாததைப்போலப் பாசாங்கு செய்தது. "என் கண்மணிகளே, என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் காதில் விழவில்லையே! நீங்கள் பலகாலம் வாழ்வீர்கள்!' என்று கடுங்கிய குரலோடு பூனே சொல் லியது. அது பாசாங்கு செய்கிறதென்பது எலிகளுக்கு ான்ருகத் தெரியும் அல்லவா? . . . . - "ஓஹோ பக்கத்திலேயா வரச் சொல்கிறீர்? பக்கத் தில் வந்தால் என்ன ஆகும் என்று எங்களுக்குத் தெரி யுமே! -
அப்பக் கதுப்பீரே! சப்பை மூக்கிரே!
பச்சைக் கண்ணிரே! கிட்டவந்தக்கால் கப்பிக் கொள்வீரே!" என்று உரக்கப் பாடிக்கொண்டு எல்லா எலிகளும் ஒடி வக்ளக்குள் புகுந்துகொண்டன.
பூனேயின் வேஷம் பலிக்கவில்லை. 7