இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
குழந்தை உள்ளம்
- அடித்தாரைச் சொல்லியழு.
- ஆக்கினைகள் பண்ணிவைப்போம்.
- தொட்டாரைச் சொல்லியழு,
- தோள்விலங்கு போட்டு வைப்போம்.
- அடித்தாரைச் சொல்லியழு.
அடித்தவர்களேச் சும்மா விடுவாளா? என்ன என்ன தண்டனை விதிப்பாள் தெரியுமா ?
- அடித்தாரைச் சொல்லியழு
- ஆக்கினைகள் பண்ணி வைப்போம்.
- தொட்டாரைச் சொல்லியழு
- தொழுவில் கடாசிவைப்போம்.
- மண்ணுல் விலங்குபண்ணித்
- தண்ணீரில் போட்டுவைப்போம்.
- வெண்ணெயால் விலங்குபண்ணி
- வெய்யிலிலே போட்டுவைப்போம்.
- நாக்கை அறுத்துவைப்போம்
- நகரைவிட்டு ஓட்டிவைப்போம்.
- பல்லைப் பிடுங்கிவைப்போம்
- பட்டணத்தில் ஒட்டிவைப்போம்.
- கண்ணே அடித்தார்ஆர்,
- கண்மணியைத் தொட்டார்ஆர்?
- பொன்னை அடித்தார்ஆர்,
- பூங்கிளியைத் தொட்டார்ஆர்?
- அடித்தாரைச் சொல்லியழு
ஆரோ அடித்து விட்டார்கள். குழந்தைக்குக் கண்ணீர் பெருகுகிறது. தாய் கற்பனையினால் குழந்தையின் கண்ணீரை வெள்ளமாக வருணிக்கிறாள். கண்ணிர் ஆறாய்ப் பெருகி ஓடிக் குதிரை குளிக்கவும் வழிப்போக்கர் காலலம்பவும் சென்று மரங்களுக்குப் பாய்கிறதாம்!
- ஆரடித்த கண்ணீர் ஆறாய்ப் பெருகிறதே!
- தாயடித்த கண்ணீர் தண்ணீராய் ஒடறது.
- ஆரடித்த கண்ணீர் ஆறாய்ப் பெருகிறதே!