பக்கம்:குழந்தை உலகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்லாங்காய் விளையாட்டு

49

 நான்கே நடந்துவர பாம்பே படர்ந்துவர அஞ்சு களாக்காய் தும்பைப்பூ அதிலேஒரு ஜன்னல் ஆக்கூரு அடிவாழை அண்ணன் தம்பி பெருவாழை ஏழு என்னும் காட்டிலே எங்கள் அண்ணன் வீட்டிலே மஞ்சள் சரட்டிலே பொத பொதைக்கிற செட்டியாருக்குப்

பொறக்கிற மாசம் கல்யாணம் ரெண்டாம் போதைக்கு ராமருக்குக் கல்யாணம் மூணும் போதைக்கு முருகரே சாட்சி குத்தடி விசாலாட்சி கொண்டு வந்தாள் வீணா கஞ்சி காமாட்சி மதுரை மீனுட்சி !

X. ஏழு காய்களே வைத்து விளையாடுவது முதலில் ஏற் பட்டாலும் நாளடைவில் எட்டு முதல் பன்னிரண்டு வரை யில் காய்களேவைத்து விளேயாடும் வழக்கமும் ஏற்பட்டது. அதற்கு ஏற்றபடி பாட்டுக்களும் உண்டாயின.

ஓர்.இராமன் போற தேசம் என்னென்ன தேசம் ? கல்இல்லாத் தேசம் கறடில்லாத் தேசம் முள்இல்லாத் தேசம் முடக்கு வெட்டி ராஜா ! ஈரிரண்டு இலசிறு தண்டு தண்டுக்குத் தண்டு தாமரைப்பூச் செண்டு முச்சைமுனி பச்சரிசி மூவகம் கொண்ட பருப்பரிசி தின்னநல்ல தினையரிசி நாலை வைத்து ரெண்டெடு நாராயணன் பேர்எடு அஞ்சவனே அம்புலிமான் பஞ்சவனே பரதேசி ஆறவளே போறவளே. அரும்பி நீடந்தவளே

திரும்பிப் பார்த்தால் திட்டிவிளே ஏழை எழுதிக்கோ எழுதின பூவைச் சூடிக்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/58&oldid=1048100" இலிருந்து மீள்விக்கப்பட்டது