இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வேறு விளையாட்டுகள்
53
குழந்தைகள்,
என்று சொல்லும். உடனே தாச்சி மறுபடியும் ஆரம்பிப்பாள்.
- முறுக்கு மூச்சி பிடிச்சவனே
- முந்நாலு வாழைப்பழம் தின்னவளே
- காக்காய்ப்பழம் தின்னவளே
- கையை வச்சுக் கால மடக்கு.
- முறுக்கு மூச்சி பிடிச்சவனே
குழந்தைகள்,
என்று ஆரவாரம் செய்யும். தாச்சி மறுபடியும் பாடுவாள்,
- மாட்டேன்னு வல்லேன்னா
- வல்லப் பந்தல் சொல்லேன்னு
- தாறும் தாறும் வாழைக்காய்
- தாளம் போலே கோபுரம்
- கரூர் பிரம்மா மண்டபம்
- சீதா தேவி பூமாதேவி
- கையை வச்சுக் காலை மடக்கு.
- மாட்டேன்னு வல்லேன்னா
இந்தத் தடவை குழங்தைகள் தாச்சியின் கட்டளைக்கு இணங்குவார்கள். தங்கள் கைகளை முதுகுப்புறமாக மடக்கிக்கொள்வார்கள். பிறகு தாச்சி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்பாள். குழந்தைகள் பதில் சொல்லிக் கொண்டே வரும்.
- கை எங்கே?
- காக்காய் கொண்டு போச்சு.
- காக்காய் எங்கே?
- புளிய மரத்திலே உட்கார்ந்திருக்கு.
- கை எங்கே?