பக்கம்:குழந்தை உலகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேறு விளையாட்டுகள்

53



குழந்தைகள்,

“ முறுக்கு மூச்சி ”

என்று சொல்லும். உடனே தாச்சி மறுபடியும் ஆரம்பிப்பாள்.

முறுக்கு மூச்சி பிடிச்சவனே
முந்நாலு வாழைப்பழம் தின்னவளே
காக்காய்ப்பழம் தின்னவளே
கையை வச்சுக் கால மடக்கு.

குழந்தைகள்,

“ மாட்டேன் ”

என்று ஆரவாரம் செய்யும். தாச்சி மறுபடியும் பாடுவாள்,

மாட்டேன்னு வல்லேன்னா
வல்லப் பந்தல் சொல்லேன்னு
தாறும் தாறும் வாழைக்காய்
தாளம் போலே கோபுரம்
கரூர் பிரம்மா மண்டபம்
சீதா தேவி பூமாதேவி
கையை வச்சுக் காலை மடக்கு.

இந்தத் தடவை குழங்தைகள் தாச்சியின் கட்டளைக்கு இணங்குவார்கள். தங்கள் கைகளை முதுகுப்புறமாக மடக்கிக்கொள்வார்கள். பிறகு தாச்சி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்பாள். குழந்தைகள் பதில் சொல்லிக் கொண்டே வரும்.

கை எங்கே?
காக்காய் கொண்டு போச்சு.
காக்காய் எங்கே?
புளிய மரத்திலே உட்கார்ந்திருக்கு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/62&oldid=1048415" இலிருந்து மீள்விக்கப்பட்டது