4
குழந்தைச் செல்வம்
கறவைப் பசுவை அதன்
கன்று சுற்றித் துள்ளுது பார்!
பால் குடிக்க வேண்டாமோ?
பழம் தின்ன வேண்டாமோ?
4
பாடங்கள் எல்லாம்
படித்திட வேண்டாமோ?
சீக்கிரம் பள்ளிக்குச்
சென்றிட வேண்டாமோ?
5
காலையும் ஆச்சுதையா!
கண்விழித்துப் பாரையா!
அப்பா! எழுந்திரையா!
அரசே ! எழுந்திரையா!
6
4. காலைப் பாட்டு
அருணன் உதித்தனன்; அம்புஜம் விண்டது;
அளிகளும் மொய்த்தன ; பாராய்!
அம்மா ! நீ எழுந்தோடி வாராய்!
1
பசிய புல் நுனியில் பதித்த வெண் முத்தமோ?
பனித்துளி தானோ? நீ பாராய்!
பைங்கிளி! எழுந்தோடி வாராய்!
2
பொழுது விடிந்தது; பொற்கோழி கூவிற்று:
பூஞ்செடி பொலிவதைப் பாராய்!
பொன்னே! நீ எழுந்தோடி வாராய்!
3
காகம் கரைந்தது; காலையும் ஆயிற்று;
கனியுதிர் காவினைப் பாராய்!
கண்ணே ! நீ எழுந்தோடி வாராய்!
4