இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
குழந்தைச் செல்வம்
தெள்ளமுதம் உண்டு,
தெவிட்டாக் கனி உண்டு, எம்
உள்ளங் குளிர
உரையாடும் பைங்கிளியோ?
4
கற்கண்டு, சீனி,
கனியுங் கனிந்தொழுகு
சொற்கொண்டு, எமக்குச்
சுகமளிக்கும் பூங்குயிலோ?
5
நெஞ்சிற் கவலையெலாம்
நீங்கத் திருமுகத்தில்
புஞ்சிரிப்பைக் காட்டி, எம்மைப்
போற்றும் இளமதியோ?
6
ஆரடித்தார் நீ அழுதாய்,
அடித்தாரைச் சொல்லி அழு;
சீரெடுத்த செல்வச்
சீமான் திருக்குமரா!
7
பாலை விரும்பினையோ?
பணிகாரம் வேண்டினையோ?
சோலைப் பசுங்கிளியே!
சுந்தரமே ! சொல்லி அழு.
8
சப்பாணி கொட்டித்
தளர்ந்தனையோ? அல்லதுன்றன்
கைப்பாவைக் காகக்
கலங்கி அழுதனையோ?
9