பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சூழ்நிலை

77

சூழ்நிலைதான் அதை மரமாக்க வேண்டும். பாறையின் மேலே போட்ட விதை பயனற்றுப் போய்விடுகிறது. விதை முளையாகி இளங்கன்றாகிப் பெரிய மரமாவதற்கு நல்ல மண் வேண்டும்; தண்ணிர் வேண்டும்; நல்ல உரம் வேண்டும். முளையிலேயே அழிந்து போகாதபடி பாதுகாப்பு வேண்டும். இவையெல்லாம் போன்றதுதான் சூழ்நிலை.

குழந்தையின் இயல்பான நல்ல திறமைகள் நன்கு வளர்வதற்கு வேண்டிய சூழ்நிலையைப் பெற்றோர் அமைத்துக் கொடுக்கவேண்டும். பெற்றோருக்கு ஏதாவது ஒரு துறையிலே குழந்தை பெருமை அடையவேண்டும் என்ற ஆவலிருக்கலாம். ஆனால் குழந்தையின் இயல்பைக் கவனியாமல் அதையே வற்புறுத்துவது சரியல்ல. அதனால் குழந்தையின் இயல்புத்திறமை மழுங்கிப் போவதோடு பெற்றோர்கள் தங்கள் ஆசையிலும் நல்ல வெற்றி காணாமல் ஏமாற்றமடைய நேரிடும்.